கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Friday, August 29, 2008

திரள் கூட்டத்தோடு ஒத்துப்போகதவன் வஞ்சிக்கப்பட்டவனா?

மற்ற யாருக்கும் கிடைக்காத அல்லது பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென்று எண்ணுகின்றார்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்ற கருத்து பல வளர்ந்த உளியர்களிடம் உண்டு!

பெரும்பாலோனோர் தவற விட்ட வெளிப்பாடு ஒருவர்னுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லையா? அல்லது தேவனுக்கு வேறு எந்த வெளிப்படும் தந்து நிறைவேற்ற முடியாதா? அவர் கரங்கள் குறுகியதா? என்பதைப்பற்றி இங்கு ஆராயலாம் என்று கருதுகிறேன்!


வேத புத்தகத்தில் துவக்கத்தில் இருந்து பார்ப்போமானால் பெரும்பாலனோர் தவற விட்டதை கண்டு பிடித்து அறிந்தவர்களே தேவனால் உயர்த்தப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்!


1. நோவாவின் காலத்தில் பெரும்பாலனோர் நீதையை தவற விட்டு விட்டனர் ஆனால் அவன் ஒருவன்மட்டும் நீதிமானை இருந்ததால் கர்த்தரால் தப்புவிக்கப்பட்டான்.

நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். (ஆதி 6:8)


2. ஆபிரகாம் வாழ்நத அவன் சொந்த தேசத்தில் அனேக கூட்ட மக்கள் வாழ்ந்தனர் ஆனால் தேவன் ஆபிரகாமை மட்டும் அழைத்து

"கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ" என்றார் காரணம் அவன் பெரும்பாலானோர் தவறவிட்ட விசுவாசத்தில் உறுதி உள்ளவனாக இருந்தான்!

3. ஆபிரகாமின் வேண்டுகதலுக்கு இணங்கி கர்த்தர் லோத்தை விடுவித்தாலும் வேதம் அவனைப்பற்றி சொல்லும்போது

"அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க"

மாமிச இச்சைகளை விடமுடியாமல் பெரும்பாலானோர் தவறவிட்ட பரிசுத்தத்தை லோத்து காத்துக்கொண்டான்.

4. இஸ்ரவேல் ராணுவத்தின் திரள் கூட்ட ஜனங்கள் கோலியாத்தை எதுவும் செய்ய முடியாமல் பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தபோது

இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.

திரள் கூட்டம் இப்படி நடுங்குகிறதே நானும் நடுங்குவேன் என்று நடுங்க வில்லை மாறாக தனி மனிதனாக

"ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம்" என்று பேசி, துணித்து கோலியாத்தை எதிர்த்து ஜெயித்து, பெரும்பாலானோர் தவற விட்ட தேவன் பேரில் தனக்கிருத வைராக்கியத்தை காத்துக்கொண்டான்!

5. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபோடே யோசபாத் ராஜா இணைந்து கீலேயாத்தில் உள்ள ராமோத் மீது யுத்தம் பண்ண போகலாமா என்று நானூறு தீர்க்கதரிசிகளை வரவழைத்து கேட்டபோது

"கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்."


ஆனால் மிகாயா என்ற ஒரே ஒரு தீர்க்கதரிசி மட்டும் "மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்." என்ற வார்த்தையை கேட்ட பிறகும் திரள் கூட்டத்தை பின்பற்றாமல் கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று சொல்லி எதிர் மாறாக தீர்க்க தரிசனம் சொன்னான் அப்படியே நடந்தது!

திரள் தீர்க்கதரிசிகள் தவறவிட்ட தீர்க்க தரிசனத்தை மிகாயா பெற்றுக்கொண்டான்

6. இன்னும் எரேமியா தீர்க்கதரிசி தான் வாழ்ந்த காலத்தில் எப்பொழுதும் எதிர்மாறாக தீர்க்கதரிசனம் சொல்லும் தனி மனிதனாகவே வாழ்ந்து அதனால் அனேக துன்பங்களுக்குள்ளனார். அவர் காலத்தில் சமாதானம் உண்டாகும் என்றும் பாபிலோன் ராஜா வரமாட்டான் என்று சொல்லும் அனேக தீர்க்க தரிசிகள் இருந்தார்கள் என்பதை கீழ்க்கண்ட வசனம் உணர்த்துகிறது

"பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்துக்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே?" (எரே 37:18)


ஆனால் இவன் ஒருவன் மட்டும் அந்த திரள் கூடாததை பின்பற்றமால்
"பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்" எரே 37:17 என்று துணிந்து சொன்னான் அது அப்படியே நடந்தது!


பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல புதிய ஏற்பாட்டில் கூட பவுல் , யோவான், மார்டின் லூத்தர் மற்றும் வேதத்தில் உள்ள பரிசுத்தவான்கள் எல்லோருமே திரள் கூட்ட மக்களை போல் இல்லமால் எதாவது ஒரு விதத்தில் விசேஷித்த வெளிப்பாடு உள்ளவராக இருந்தார்கள் அவர்கள் எல்லாம் தவறான வழியில் போய்விடவில்லை. அவர்கள் எழுதியதைதான் வேதம் என்று நமது கையில் வைத்துள்ளோம்

நான் சொல்ல விரும்புவது எல்லாம் "பெரும்பாலானோர் தவற விட்டதை அறிந்து கொண்டவர் எல்லாம் வஞ்சிக்கப்பட்டார்" என்ற கருத்து வேதத்தின்படி சரியானது அல்ல என்றே கருதுகிறேன். ல்லா விதத்திலும் தற்கால உளியர்களோடு ஒத்துப்போகும் பல போதகர்கள் "பணம் சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்வதில்" கவனமாக உள்ளனர் என்பது அநேகர் அறிந்தது.

எனவே "மரம் எப்படிப்பட்டது என்று அதன் கனிகளாலே அறியப்படும்" என்று ஆண்டவராகிய இயேசு சொன்னதுபோல் அவரவர் வாழ்க்கை நிலைகளை வைத்தே வஞ்சிக்கப்பட்டோரை அறிய முடியுமே தவிர வேறு எந்த விதத்திலும் அறிவது கடினம் என்பது எனது கருத்து!

நாம் வாழும் தற்போதைய கிறிஸ்த்தவ உலகம் பலதரப்பட்ட வித்யாசமான உபதேசங்கள் மற்றும் பிரிவுகளால் நிரம்பியுள்ளது. ஒரே வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் நாங்கள் செய்வதுதான் சரி, நாங்கள் தான் வசனத்தின்படி சரியாக சொல்கிறோம் என்று சொல்வதோடு அவரவர் ஏதாவது ஒரு வசனத்தை மேற்ற்க்கோள் காட்டி அடுத்தவர் வஞ்சிக்கப்பட்டவர் என்று சொல்வது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் யார் உண்மையில் வஞ்சிக்கப்பட்டவர் என்பது யாருக்கும் தெரியாது!

எனவே அடுத்தவரை நியாயம் தீர்க்கும் முன் நான் மட்டுமல்ல எல்லோருமே "நான் வஞ்சிக்கப்பட்டேனா" என்று கேள்வியை தங்களுக்கு தாங்களே கேட்டுக்கொள்வது நல்லது என்று கருதுகிறேன். ஏனெனில் யார் வேண்டுமானாலும் வஞ்சிக்கப்படலாம்! மனிதர்கள் போதனையை நம்புவதைவிட ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து தங்கள் வழியை சரியானதா என்று தேவனிடத்தில் விசாரித்து அறிவது நல்லது என்று கருதுகிறேன். ஏனென்னில். நாம் எந்த போதனையில் இருக்கிறோம் என்பது தேவனுக்கு ஒரு பொருட்டல்ல அவர் சித்தம் செய்கிறோமா மற்றும் தேவனின் வர்த்தைகள்படி பரிசுத்தமாக வாழ்கிறோமா என்பதுதான் மிகவும் முக்கியமானது என்பது அடியேனின் கருத்து!

Thursday, August 28, 2008

பாதாளத்தின் பயங்கரங்கள்

அன்பு சகோதரர்களே!

வேத புத்தகத்தில் சுமார் 80 முறைக்கு மேல் பாதாளம் என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளதொடு மட்டுமல்லாமல் "நரகம்" "புறம்பான இருள்" "அக்கினி சூளை" "அக்கினியும் கந்தகமும் எரியும் கடல்" என்றால் வருணிக்கப்பட்டுள்ள நரகம் பாதாளம் பற்றி அநேகருக்கு போதிய வெளிப்பாடு இல்லாத காரணத்தால், அந்த பயங்கரமான இடம் பற்றி முழு நம்பிக்கை மற்றும் பயம் இல்லாமல் வெகு நிர்விசாரமாக, ஆத்துமாகளுக்காக பரிதபிக்கும் உள்ளம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். எனவே முழு வேத வசன ஆதாரங்களோடு பாதாளம் நரகம் பற்றிய இந்த கட்டுரையை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

நான் எழுதுவதில் எங்கும் தவறு அல்லது திருத்தம் இருக்குமாயில் அறிந்தவர் விளக்கலாம் நான் திருத்திக்கொள்வேன். ஆனால் வேத வசன ஆதாரம் தந்த பிறகு அது இது அல்ல வேறு என்றெல்லாம் கருதுவீர்களானால் அதற்க்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல!
முதலில் ஆத்தும்மவுக்கு என்று ஒரு தனி சரீரம் உண்டு என்பதை நம்ப வேண்டும் அது சாதரண மனித கண்களுக்கு தெரிவதில்லை. மருரூப மலையில் மோசே தரிசன்னமானது அந்த சரீரத்தில்தான்

ஏனெனில் வேதபுத்தகத்தில் உள்ள வசனங்களை தனக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டு அருத்தம் எடுக்கும் அநேகர் மத்தியில் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை விளங்கவைப்பது மிக கடினம். நம்புகிறவர் நம்பலாம் நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடலாம். தேவை இல்லாத பொய்யை எழுதி எனக்கு எந்த பலனும் இல்லை எனக்கு நேரமும் இல்லை
நன்றி!


அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர் (சங்: 71-20)

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.(I சாமு 2:6)

என்ற வார்த்தைகளை படி, பாதாளத்தில் இறங்கவும் ஏறவும் பண்ணக்கூடிய கர்த்தராகிய தேவன், 1992 வருடம் தாழ்ந்த பாதாளம் வரை இறங்கிவிட்ட என்னை அங்கிருந்து ஏறப்பண்ணினார். அப்பொழுது நான் பாதாளங்கள் பற்றி அறிந்துகொண்ட உண்மைகளை நீங்களும் அறிந்துகொண்டால் நிச்சயம் அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக ஒரு பரிதபிப்பு வரும் என்ற நோக்கில் இந்த கட்டுரையை பதிப்பது நல்லது என்று நினைத்து பதிக்கிறேன். இதில் அனேக நான் அனுபவித்த, நேரடியாக பார்த்த காரியங்கள் அடங்கியுள்ளன.


பாதாளம் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது:

பாதாளம் என்பது ஒரு குழி என்றும் அது பூமியின் கீழ் தாழ்விடங்களில் இருக்கிறது என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் தெரிவிக்கின்றன.

அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; (வெளி 9;2)
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர் (சங் 88:6)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், (எசே :31:16)

அது பூமியிம் கீழே இருக்கிறது என்பதை கீழ் கண்ட வசனம் தெரிவிக்கிறது

கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, (ஏசா 14:9)



ஆம் அன்பானவர்களே பாதாளம் என்பது ஒரு மிக பெரிய படுகுழி அப்படியே கீழ் நோக்கி பொய் கொண்டே இருக்க கூடியது. அது பூமியின் கீழே மிக சமீபமாக இருக்கிறது. பல இடங்களில் இருந்து அதன் உள்ளே போகும் வழிகள் உள்ளன.

பாதாளத்தின் தன்மைகள் என்ன:?

பாதாளம் தன்னை விரிவாக்கும் தன்மை உள்ளது என்று கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது!


அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள் (ஏசா 5:14)
தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல் (ஆப 2:5)

பாதாளம் எவ்வளவு ஆத்துமாக்கள் உள்ளே போனாலும் திருப்த்தி அடையாது, உள்ளே வாங்கிக்கொள்ளும் தன்மை உடையது என்றும கீழ்க்கண்ட வசனங்கள் சொல்கின்றன!

போதும் என்று சொல்லாத நான்குமுண்டு அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே. (நீதி 30:15,16)

பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; (நீதி 27:20)

மேலும் பாதளம் ஆத்துமாக்களை விழுங்கும் தன்மை உடையது:

பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; (நீதி 1:12)

ஒரு திமிங்கலம் ஒரு மனிதனை விழுங்கினால் அவன் சிறுக சிறுக உரு குலைந்து அழிவதுபோல் இங்கு அழிவு உண்டு ஆனால் அது நிரந்தரம் அல்ல மீண்டும் மீண்டும் அது நடைபெற்றுக்கொண்டு இருக்கும். ஏனெனில் அங்கு அக்கினி அவியாது! புழு சாகாது! சதா காலமும் அங்கு எரிந்துகொண்டு இருக்கும்

பாதாளம் ரூபத்தை அளிக்கும் தன்மை உடையது என்று கீழ் கண்ட வசனம் சொல்கிறது.

அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும். (சங்: 49-14)

அங்கிருப்பவர்களுக்கு ஒரு நிலையான ரூபம் இருக்க முடியாமல் அழிவதும பின்பு புதிதாக உருவத்தாலும் நடைபெறும்.

பாதாளம் கொடியது:

நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது ( உன் 8:6)

ஆம் அன்பானவர்களே பாதாளம் மிக கொடியது மரித்து அதனும் இறங்கும் யாரும் அதனுள் இருந்து ஏறி வரவே முடியாது :

மேகம் பறந்துபோகிறதுபோல பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான் யோபு ( 7:9)

ஆம் மரித்து பாதாளத்துக்குள் இறங்கும் யாருமே மீண்டும் ஏறி வரவே முடியாது .

ஆகினும் தேவனாகிய கர்த்தரால் ஒரு மனிதனை பாதாளத்தினுள் இறங்கவும் ஏறவும் பண்ண முடியும் என்று கீழ்க்கண்ட வசனங்கள் சொல்கின்றன

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.(I சாமு 2:6)
கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர். (சங் 30:3)

பாதளத்தில் மரண அறைகள் என்னும் அறைகள் உண்டு:

அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். ((நீதி 7:27)

மரண அறைகள் என்று சொல்லப்படும் இந்த அறைகளில் நடக்கும் பயங்கரங்கள் எழுத முடியாதவை கொதிக்கும் எண்ணெய் கொப்பரயினுள் போட்டு வேக வைக்கப்படும் ஆனால் அவனுக்கு முடிவு என்பது வராது. ஒரு மனிதனை அப்படியே வைத்து அறுப்பதும் மீண்டும் இணைய வைப்பதும் அறுப்பதும் போன்ற அனேக கொடிய செயல்கள் இங்குள்ள மரண அறைகளில் நடைபெறும்.

அவனவன் செய்த செயல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு அறைகளிலும் வித்யாசமான கொடூரங்கள் நடக்கும்


பாதாளத்தில் யாரெல்லாம் இறங்குவார்கள்:-

"விசுவாசம் உள்ளவனாகி ஞானஸ்த்தானம் பெறுபவன் இரட்சிக்கப்படுவான் விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான்"

ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பு பெறாத யாராக இருந்தாலும் மரித்தவுடன் பாதாளத்தில் இறங்குவார்கள்

பாதாளத்தின் அதிபதி யார்?


அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர் (9:11)
பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (11:7)
நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது(17:8)

மேற்கண்ட வசனம்படி பாதாளத்தின் அதிபதி விழுந்துபோன தூதன் எனப்படும் மிருகம் ஆகும். அங்கு போகும் ஆத்துமாக்கள் அவனுடைய கையாட்களால் வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்புவரை வாதிக்கப்படும்


பாதாளத்தின் வகைகள்:

பாதளம் என்பது மூன்று அடுக்குகளை கொண்டது அவைகள்

1. கீழான பாதளம் (பாதாளத்தின் மேல் தட்டு ஆனால் பூமிக்கு கீழான பாதளம்)
கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம். (15:24)
இங்கு ஆத்துமாக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன அதாவது ஒரு கூடை நிறைய மீன் இருப்பது போல நேழு நேழு என்று ஒன்றன் மேல் ஒன்றாக போராடிக்கொண்டு இருக்கின்றன மற்றபடி கொடூர வேதனை இல்லை.

2. தாழ்ந்த பாதளம் அல்லது அகாதமான பாதாளம்
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (86:13)
ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.( 14:15)

இங்கும ஆத்துமாக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று ஒன்றன் மேல் ஒன்றாக போராடிக்கொண்டு இருக்கின்றன இங்கு புழுக்களும் பூச்சிகளும் உண்டு மற்றபடி கொடூர வேதனை இல்லை. ஆனால் மிகப்பெரிய வேதனை என்னவென்றால் கீழே நரக பாதாளத்தில் நடக்கு கொடூரங்கள் இவைகளுக்கு தெரியும். தானும் அங்கு போய்விடக்கூடாது என்ற நோக்கியில் மேலே ஏற எப்பொழுதும் முயற்சித்து தோற்றுக்கொண்டே இருக்கும், பயமும் திகிலும் உங்கு உண்டு

3. நரக பாதாளம்
ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான். (நீதி 9:8)

இங்கு வரும் ஆத்துமாக்கள் இரவு பகலாக பிசாசின் ஆவிகளால் பல்வேறு விதமாக வாதிக்கப்படுகின்றன. இதற்க்கு கொள்ளளவே கிடையாது எவ்வளவு போனாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையது.

அக்கினிக்கடல்:

இந்த நரக பாதாளத்தை ஒட்டி அக்கினி கடல் என்ற ஓன்று உள்ளது. ஆனால் இது வெள்ளை சிங்கசன நியாய தீர்ப்புக்கு பிறகுதான் திறக்கப்படும்.

தற்சமயம் நடைபெறுவது

இயேசு கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்ளாத ஒரு மனிதன் மரித்த உடன் பாதாளத்தில் இறங்குகிறான். அவன் மிக நல்லவனாக இருந்தால் கீழான பாதாளம் எனப்படும பாதாளத்தின் மேலுள்ள பகுதியிலேயே தங்கிவிடுவான். ஒரு வேளை அவன் ஒரு சாதரண பாவியாக இருந்தால் தாழ்ந்த பாதளம் வரை செல்வான் அங்கு தங்கிவிடுவான். மிகவும் மோசமான பாவியாக இருந்தால் அவன் நேராக நரக பாதளம் சென்று அங்கு பிசாசுகளினால் வெள்ளை சிங்கசன நியாய தீர்ப்புவரை வாதிக்கப்படுவான்.

தற்சமயம் பாதாளத்தின் மேல்பகுதி மற்றும் தாழ்ந்த பாதளம் முழுவதும் நிரம்பி விட்டதால் மரிக்கும் ஒருவர் மோசமான பாவி என்றால் நரக பாதளம் போய்விடுவார். அவர் சாதாரண பாவியாக இருந்து தாழ்ந்த பாதாளத்தில் தங்கி விட்டால் அங்குள்ள இதற்க்கு முன் மரித்த யாரவது ஒருவன் நரக பாதாளத்தில் போய் விழுவார் ஒருவேளை அவர் மிகவும் நல்லவராக பாதாளத்தின் மேல் பகுதியில் தங்கி விட்டால் அவருக்கு கீழ் உள்ள எல்லா ஆத்துமாகளும் ஒரு படி கீழே இறங்கி கடைசியில் உள்ளவர் நரக பாதாளம் போய் விடுவார்.

எனவே இன்று இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் ஒருவரை மரித்தால் அவரோ அல்லது அவருக்கு முன் மரித்த ஒருவரோ நரக பாதாளம் போவது நிச்ச்சயம்.

(தொடரும்)


Friday, August 22, 2008

இலக்கம் அறுநூற்றறுபத்தாறு

அன்பு சகோதரர்களே!
.
வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது:
.
16.அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், 17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. 18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.


இந்த "இலக்கம் அறுநூற்றறுபத்தாறு." சம்பந்தமாக வேத பண்டிதர்களிடைய பலவிதமான கருத்துக்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே!. ஆகினும் வேதத்தை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது இந்த "இலக்கம் அறுநூற்றறுபத்தாறு." என்பது பணம் மற்றும் உலக பொருளையே குறிக்கிறது என்பது புலனாகின்றது. அதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட வசனங்களை முன்வைக்க விரும்புகிறேன்:


1. வேத புத்தகத்தில் இந்த அறுநூற்றறுபத்தாறு என்ற வார்த்தை மொத்தம் இரண்டு இடத்தில்தான் வருகிறது ஒன்று இங்கு, இன்னொன்று 2நாளாகமம் 9:13ல் சாலமொனுக்கும் வந்த பொன்னின் அளவை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது: 13. வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது. இதன் மூலம் நாம் "அறுநூற்றறுபத்தாறு" என்பது பணம் அல்லது உலக பொருளை குறிக்கிறது என்பதை அறியலாம்.


2. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்து இரண்டு எஜமானுக்கு ஊளியம் செய்ய முடியாது என்று சொல்லும் போது தேவனுக்கும் சாத்தனுக்கும் என்று குறிப்பிடாமல் சாத்தானை "உலக பொருள்" என்று குறிப்பிட்டுள்ளதை நாம் ஆராய்ந்தால் உலக பொருள்மேல் உள்ள பற்றுதான் சாத்தான் என்று உணர்ந்துகொள்ளலாம்.


3. வேதத்தில் என்னென்னவோ பாவம் செய்தவர்களுக்கு எல்லாம் கர்த்தர் மன்னிப்பு கொடுத்தார். தாவீது கொடிய பாவம் செய்தான் ஆனால் மன்னிப்பு பெற்றான். அதுபோல் இஸ்ரவேலின் ராஜாக்கள் பலபேர் பலவிதமான தவறுகள் செய்து மீண்டும் மன்னிப்பு பெற்றுள்ளனர் ஆனால் வேதத்தில் மன்னிப்பை பெறாதவர்கள் வரிசையில் முதலில் நிற்பவர்கள் பணம் மற்றும் உலகபொருள் ஆசை உடையவர்களே என்று பார்க்க முடியும்.


a. நமதாண்டவரை பணத்துக்காக கட்டிகொடுத்த யூதாஸ் (பின்பு குற்றமற்ற இரத்தத்தை காட்டிக்கொடுத்தேன் என்று மனஸ்தாபப்பட்டும் பயனில்லை)

b. எலிசாவின் வேலைக்காரன் கேயாசி - எலிசாவை போல பெரிய தேவ மனிதனாக மாறவேண்டிய அவன் சாதாரண உலகப்பொருள் மேல் உள்ள ஆசையால் குஸ்டரோகியாக மாறி மன்னிப்பை பெறாமல் போனான்.

c. அமலேக்கியரின் கொள்ளையின் மேல் பரந்த சவுல், அதை கர்த்தருக்கு பலியிடத்தான் கொண்டுவந்தேன் என்று எவ்வளவோ மழுப்பி பார்த்தும் பின்பு பாவம் செய்தேன் என்று புலம்பியும் கர்த்தரால் ஆகதவன் என்று தள்ளப்பட்டு போனான்.


மேற்கண்ட உதாரணங்கள் எல்லாம் உலகபொருள் மீது பற்றுள்ளவர்கள் கர்த்தரிடம் மன்னிப்பை பெறமுடியாது என்பதற்கு திருஷ்டான்திரமாக உள்ளன.


இப்பொழுது நான் குறிப்பிட்ட வசனத்தை சற்று ஆராய்வோம் "16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்"


இதில் வலது கை என்பது நம்மிடம் சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் பொருள் (Possession) மேலுள்ள நம்பிக்கையையும் நெற்றி என்பது சேர்க்கவேண்டும் என்ற சிந்தனையில் உள்ள பணம் அல்லது பொருளையும் குறிக்கிறது. சிறியோர் பெரியோர் எல்லோரும் இதில் எதாவது ஒன்றை கண்டிப்பாக கொண்டிருக்கவேண்டும். 17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது சேர்த்து வைக்கப்பட்ட பணமோ, அல்லது எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையோ இல்லாத எவனும் கொள்ளவும் விற்கவும் முடியாது (இது முற்றிலும் உண்மைதான்.


எப்படியெனில் கையில் பணமோ அல்லது பணம் சம்பாதிக்கும் ஆசையோ இல்லாதவன் ஒரு பொருளும் வாங்கமுடியாது.)


18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது;


உலகத்தில் கணக்கு பார்க்கபடுவதில் மிக முக்கியமானது பணம் தான். படித்தவன் படிக்காதவன் எல்லோரும் பணத்தை கண்டிப்பாக கணக்கு பார்த்தே தீருவான்.


அடுத்து அது மனிதனின் இலக்கமாயிருக்கிறது என்பது மிக தேவ்ளிவாக பணம் என்பதை காட்டுகிறது. பணம் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும் ஒரு பொருள்தான்.


இவற்றை எல்லாம் பார்க்கும் போது இந்த உலகத்தில் மிகப்பெரிய சாத்தான் பணம் மற்றும் உலகபொருள்தான் என்பது தெளிவாக தெரிகிறது. எனவேதான் நமதாண்டவராகிய இயேசுகிறிஸ்த்து பூமியில் வாழ்ந்த காலங்களில் பணத்தை கையால் தொட்டதாக கூட தெரியவில்லை. ஒரே ஒரு முறை ராயனுக்கு வரி கொடுப்பது பற்றி விளக்கும்போது கூட "ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள்" என்றுதான் சொல்லியுள்ளார் அதை கையில் கூட வாங்கவில்லை எனவே யாராவது வந்து இலக்கம் போடுவார்கள் என்று நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சகோதரர்களே! பணத்தின் மேலும் உலகபோருளின் மேலும் நம்பிக்கை வைப்பவன் இலக்கம் அறுநூற்றறுபத்தாறு உடையவன் ஆவான் என்பது எனது கருத்து.


SudarP

நுணலும் தன் வாயால் கெடும்:-



அன்பு சகோதரர்களே!

துவக்கப்பள்ளி நாட்களில் படித்த உலக பழமொழி இது. அந்த உலக பழமொழி பாடலின் கட்சி வரிகள் இதோ:

"நல்லாய், மணலுக்குள் மூழ்கி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும்"

அதாவது

பாம்புக்கு பயந்து மணலுக்குள் குழிதோண்டி யாருக்கும் தெரியாமல் படுத்து கிடக்கும் தவளையானது, தன் வாயை அடக்க முடியாமல் அங்கிருந்து சத்தம் போட்டு பாம்புக்கு தன் இருக்கும் இடத்தை காட்டி அதனால் மடிந்துபோகும் என்பதே இதன் பொருள்


அன்பானவர்களே இறைஞானம் எனது உலக ஞானத்துக்கு நேர் எதிரானது என்பதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் அனேக வார்த்தைகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.மேலும்:


உலகம் பணக்காரனை பாக்யவான் என்கிறது ஆனால் ஆண்டவர் ஆவியில் எளிமை உள்ளவர்களே பாக்கியவான் என்கிறார்

உலகம் துன்ப படைத்தவனையே பாக்கியவான் என்கிறது ஆனால் ஆண்டவர் நீதியினிமித்தம் துன்பபடுகிறவர்கள் பாக்யவான் என்கிறார்.

உலகம் உனக்கு கிடைப்பதை விட்டுவிடாதே என்கிறது ஆண்டவர் உன்னிடம் கேட்பவனுக்கு கொடு என்கிறார்

உலகம் தாழ்மை உள்ளவனை கோமாளி என்கிறது ஆண்டவர் தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் விட்டு கொடுத்துவிடு என்கிறார்.

இப்படி அனேக காரியங்களை சொல்லமுடியும்.

அதுபோல் இந்த பழமொழி உலக ஞானத்துக்கு சரியாக இருந்தாலும். இதன் கருத்தை நான் வேதத்தோடு தியானித்த பொது கிடைத்த செய்திதான் இந்த பதிப்பு.

1. மணலுக்குள் மூழ்கி மறைந்து கிடப்பது!


ஆண்டவரை அறிந்த ஒருவர், எதாவது ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டு ஒரு சுக போகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஆண்டவரை பற்றி சொன்னால் அல்லது ஆண்டவர் சொல்படி வாழ்ந்தால் ஏதாவது பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று நினைத்து உலகத்துடன் ஒத்தவேஷம் போட்டு வாழும் வாழ்க்கையையே இந்த மறைந்து கிடப்பது குறிக்கிறது.

இந்த மறைந்து வாழும் வாழ்க்கை ஒரு கிறிஸ்த்தவ வாழ்க்கையா?
ஆண்டவரின் அன்பை உண்மையாக அறிந்த ஒருவரால் இப்படி வாழ முடியுமா?

ஒரு நாளும் முடியவே முடியாது. விளக்கை கொளுத்தி விளக்கு தண்டுமேல் வைக்கவேண்டும் என்பதும் நமது ஆண்டவர் சொன்ன வார்த்தை.

வெளியில் வந்தால் சாத்தான் என்கிற பாம்பாகிய எதிரி உண்டு!

ஆனால் என்ன துன்பம் வந்தாலும் கேடு வந்தாலும் மறைந்து கிடக்கும் அல்லது பயந்து போய் ஆண்டவரை பற்றி பேசாமல் அவர் வார்த்தைக்கு கீழ்படியாமல் வாழும் வாழ்க்கை ஒரு கிறிஸ்த்தவ வாழ்க்கையே அல்ல. அப்படிபட்டவர்கள் உண்மையாக ஆண்டவரின் அன்பை அறியவில்லை என்பதே உண்மை.

2. வாயால் கெடுவது.


தேவையற்ற உலக பேச்சுகளை பேசி தனது வாயாலே கெட்டுபோன பலரை பார்க்க முடியும், ஆனால் கிறிஸ்த்தவத்தில் ஆண்டவரை பற்றி பேசும் ஒவ்வொரு பேச்சும் எழுத்துக்களும் அவருக்காக செய்யும் ஒரு சிறு செயலும் "கர்த்தரின் ஞாபக புஸ்த்தகத்தில்" குறிக்கப்படும். அதனால் மிக்க பயன் உண்டே அன்றி கெடுதல் எதுவும் இல்லை

மேலும் ஆண்டவரின் உண்மை அன்பை அறிந்த ஒருவராலும் அவரை பற்றி பேசாமல் இருக்கவே முடியாது! எரேமிய சொல்வதுபோல் "ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று." (எரே 20:9)

ஆண்டவரின் வார்த்தைகளை உள்ளத்தில் அடக்கி வைத்து மறைந்து வாழவே முடியாது!


" புறப்பட்டு போய் சுவிஷேசத்தை" அறிவியுங்கள் என்பது நமது ஆண்டவர் சொன்ன வார்த்தைகள்.

அதேபோல் பேதுரு பரிச்த்த ஆவியின் அபிஷேகம் பெற்றவுடனும் பவுல் அவர்கள் ஆண்டவரின் தரிசனம் பெற்ற உடனும் தாமதிக்காமல் மறைந்து கொள்ளாமல் தங்களது வார்த்தைகளை பிரசங்கிக்க ஆரம்பித்து விட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் அனுபவித்த பாடுகளும் துன்பமும் அநேகம்தான். அவர்கள் மறைந்து கொண்டு பேசாமல் இருந்தால் துன்பம் இல்லை தானே.

எனவே துன்பத்துக்கும் உலக இன்பம் போய்விடுமோ என்று பயந்தும் ஆண்டவரை பற்றி பேசாமல் பயந்து வாழும் வாழ்க்கை ஒரு உண்மையான கிறிஸ்த்தவ வாழ்க்கை அல்ல!

3. பாம்பாகிய எதிரி!


உலத்தில் உள்ள பாம்பாகிய எதிரி தவளையை விழுங்கிவிடலாம் ஆனால் நாம் பிரசங்கிக்கும் ஆண்டவர் எதிரியாகிய சாத்தானின் தலையை நசுக்கியவர் "அல்லேலூயா" எனவே அவனால் நம்மை ஒன்றும் செய்யவே முடியாது எனவே நாம் பயப்பட வேண்டிய தேவையே இல்லை.

"இதோ உலகத்தின் முடிவு பரியந்தவும் சகல நாட்களும் உங்களோடே இருக்கிறேன்" என்று தைரியமூட்டும் வார்த்தைகளை சொல்லியுள்ள ஜீவனுள்ள தேவனை வணங்கி கொண்டு எதிரிக்கு பயந்து பேசாமல் இருப்பது என்பது மூட்டை பூச்சிக்கு பயந்து கொண்டு வீட்டுக்குள் போகாமல் இருப்பதையே குறிக்கும்.

எனவே ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் துணித்து இருக்கும் நிலையிலேய ஆண்டவரின் அனைவருக்கும் எடுத்து சொல்வதோடு ஆண்டவரின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கண்பிப்பதே துணிந்து ஆண்டவருக்காக வாழும் ஒரு வாழ்க்கை ஆகும்.