கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Friday, February 27, 2009

அன்பின் மூன்று வகைகள்

அன்பு என்ற பண்பு எல்லோருக்கும் பிடித்த யாவரையும் கவரக்கூடிய ஒன்று ஆகும்! அன்பாக பேசி பழகும் ஒருவருடன் யாருமே வெகு விரைவில் ஐக்கியம் ஆகிவிட முடியும். அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல், கருணை என்று பல்வேறு பரிணாமங்கள் உள்ளது.
.

அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (1யோவா 4:8) என்று அன்பின் அதிமுக்கியத்துவத்தை வேதம் நமக்கு தெளிவாக விளக்கியுள்ள போதிலும்,

அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். (மத். 24:12)
என்ற வேத வார்த்தைப்படி இந்நாட்களில் அனேக மனிதர்களிடம் வெகு வேகமாக குறைந்து கொண்டே போகும் அன்பின் வகைகளை அறிய தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்

உலகில் காணப்படும் அன்பை பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

1. மிருக அன்பு :
மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும் அவைகளிடத்திலும் அன்பு உண்டு. அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட ஒருபடி அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அது சுகமாய் தங்கி இருக்கும் இடத்தில் அந்நியர் யாரும் வந்துவிட்டால் உடனே ஒரு சத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதொடு கடும் கோபத்துடன் எதிராளி மீது மோதும் தன்மையுடையது

இது போன்ற அன்பு இன்று அனேக மக்களிடமும் காணப்படுவதுதான் மிகவும் வேதனையான விஷயம். தலைவிரித்தாடும் சுயநலம், எல்லாவற்றிலுமே ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் நிலைமை, யார் நஷ்டம் அடைகிறார், அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை செய்யாமல் தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் யார் எப்படி போனால் நமக்கென்ன என்ற நோக்கோடு இன்று மனித கூட்டம் செயல்படுகிறது.

உயிர்காக்கும் மருந்திலிருந்து உணவு பொருள்கள் வரை எல்லாவற்றிலும் கலப்படம், தெரு பொறுக்கும் கார்பரேசன் துடப்பத்தில் இருத்து மனிதனின் கிட்னி வரை எங்கும் திருட்டு. இவை எல்லாம் மிருக அன்பை விட கேவலமான அன்பு மனிதனிடம் புகுந்து விட்டதால் வந்த அலங்கோலங்கள். .

2. மனித அன்பு:-

மனித அன்பு என்பது மாறும் அன்பாகும். இன்று "நீ இல்லாமல் வாழவே முடியாது" என்று சொல்லும் அதே வாய் நாளை "நீ இருந்தால் என்னால் வாழவே முடியாது" என்று மாறி பேசும். இன்று "உன்னை போல் நல்லவன் இல்லை" என்று சொல்லும் வாய் நாளை "உன்னை போல ஒரு கெட்டவனை நான் பார்த்ததே இல்லை" என்று சொல்லும் மனித அன்பு நம்பகத்தன்மை அற்றது ஆகும்

மேலும் இந்த அன்பு பச்சோந்தி போல அவ்வப்பொழுது நிறம் மாறும் தன்மை கொண்டது. ஏழை, பணக்காரன், பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் அடிப்படையிலும் வயது மட்டும் இருக்கும் சூழ்நிலை பதவிக்கு தகுந்தார்போலவும் நிறம் மாறும் தன்மையுள்ளது.

ஞாயிற்று கிழமை இயேசு எருசலேம் உள்ளே நுழையும் போது அவருக்கு மிக பெரிய வரவேற்பு கொடுத்து "உன்னதத்தில் இருந்து வந்தவருக்கு மகிமை" என்று பாட்டு பாடிய மக்களில் பலர் வியாழக்கிழமைக்குள் "அவரை அகற்றும்" "சிலுவையில் அறையும்" என்று சத்தம்போடும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் பாருங்களேன். காரணம் அவர்கள் இயேசுவை புகழ்ந்தால் தனக்கும் அவர்போல் அடி உதை கிடைத்து விடும் என்ற பயம்தான்.

ஆளை பார்த்தல் ஒரு அன்பு ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு அப்பப்பா எத்தனை விதமான மனித அன்புகள்!
.

உலக மனிதர்களின் பச்சோந்திதனமான அன்பு எப்பொழுது எப்படி மாறும் என்பதை தனத்தையும் விளக்கி சொல்ல முடியவே முடியாது! . ஆகவேதான் "உங்கள் அன்பு மாயமற்றதாய் இருப்பதாக" என்று பவுலடியார் எச்சரித்துள்ளார்

3. தெய்வீக அன்பு:

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவா 15:!3) என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைகளில் வரும் உயர்ந்த அன்பினையே தெய்வீக அன்பு என்றும் நேசம் என்றும் சொல்ல முடியும்.
தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக தன்னையே கொடுக்க கூட தயங்காது. ஒருவன் எத்தனை முறை திட்டினாலும், எத்தனை முறை கடன் வங்கி திருப்பிதாராமல் போனாலும், எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன் மீதிலும் அன்பு வைக்கும் நிலையான அன்பே தெய்வீக அன்பு.

.
இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும் மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். இறைவனின் ஆவி நம்முள் உற்றப்பட்டால் ஒழிய இப்படி ஒரு அன்பை நாம் ருசித்து பார்க்க முடியாது. அப்படிப்பட்ட தெய்வீக அன்பை பற்றி அன்பை பற்றி 1கொரிந்தியர் 13ம் அதிகாரம் மிக அருமையாக விளக்குகிறது.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
நரகம் என்று ஒரு கொடிய இடம் இருக்கிறது என்பதை நேரடியாக பார்த்த தெய்வீக மனிதர்கள், எப்படியாவது இந்த ஜனங்களை அங்கு போவதிலிருந்து மீட்க வேண்டும் எந்த ஆதங்கத்தில் சொந்த நாட்டை, நல்ல வாழ்க்கையை துறந்து காடு மேடு என்று அலைந்து இயேசுவை அறிவிக்கும் அந்த அன்பை என்னே சொல்வது.


நல்ல வாழ்க்கையை துறந்து இந்தியாவுக்கு வந்து இந்திய மக்களுக்காக உழைத்து மரித்த "கார்மைக்கேல் அம்மையார்" "மதர் தெரசா", ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததர்க்காக நெருப்பால் கொளுத்தப்பட்ட வில்லியம், மார்டின் லூதர் போன்ற தேவே மனிதர்களிடமே இந்த அன்பை கான முடியும். யாரென்றே தெரியாதவருக்காக கண்ணீர் விட்டு கதறி மன்றாடவும், பிறருக்காக தன்னையே கொடுக்கவும் கூடிய அன்பு கிறிஸ்தவத்திலன்றி வேறு எந்த மதத்திலும் கிடையாது. ஏனென்றால் அன்புக்கு இலக்கணமான ஆண்டவர் இயேசு என்னும் ஜீவனுள்ள உண்மை தேவன் இங்கு தான் இருக்கிறார்!

கண்ணதாசன் சொன்னதுபோல் "கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்" " கருணை மறந்து வாழும் மக்கள் கடவுளை தேடி எங்கு அலைந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியாது"

Labels:

Monday, February 16, 2009

மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல!

தேவனாகிய கர்த்தர் 1992ஆம் ஆண்டு அடியேனை தனது வல்லமையின் ஆவியினால் இரண்டு முறையாக மொத்தம் 7 நாட்கள் அபிஷேகித்து வேதத்தில் உள்ள அனேக ரகசியங்களை தெரியப்படுத்தினார்.

அந்த சமயங்களில் ஒருமுறை பூமியின் தாழ்விடங்கள் வரை என்னை இறங்கவும் ஏறவும் பண்ணினார். என் உடம்பு மட்டும் பூமியில் இருக்க, ஆத்தும சரீரத்தில் இருந்த நான் தாழ்ந்த பாதளம் வரை சென்று அங்கு ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரித்த ஆத்துமாக்களை அப்படியே நேரில் பார்ப்பது போல பார்த்து அவற்றின் வேதனையை அனுபவித்தேன். அத்தோடு இன்னொருமுறை என்னை நரகத்தில் உள்ள கொதிக்கும் எண்ணெய் கொப்பரை ஒன்றில் தூக்கி போட்டுவிட்டார்கள். கொதிக்கும் எண்ணெய் கொப்பரை ஒன்றில் போடப்பட்ட மனிதன் எப்படி துடிப்பானோ அதுபோல பூமியில் கிடந்த என் மாமிசம் துடித்து அங்கும் இங்கும் துள்ளி கை கால்களில் அனேக அடிபட்டு காயம் ஏற்பட்டு அனேக நாட்கள் ஆராமல் இருந்து.

.

நான் நரகத்தில் விழுந்தேன், நரகத்தை பார்த்தேன் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. எனக்கு பயித்தியம் பிடித்துவிட்டு என்று நினைத்து இரஜாவூர் என்னும் ஒரு உரில் உள்ள RCசர்ச் ஒன்றில் கை கால்களில் சங்கிலியால் கட்டி சுமார் ஒரு மாதம் போட்டுவிட்டார்கள்.

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்... http://www.victoryondeath.blogspot.com/




Wednesday, February 11, 2009

வேதபாரகர், பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாக இராவிட்டால்....

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் வாயில் இருந்து புறப்பட்ட உலகை நியாயம் தீர்க்கப்போகும் வார்த்தைகளில் "யார் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது" என்பது சம்பத்தப்பட்ட இரண்டாவது வார்த்தை:
"வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்(மத்:5:20)
வேதபாரகர் பரிசேயர் என்பவர்கள் ஆண்டவராகிய இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பழைய ஏற்ப்பட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு தாங்கள் அனைத்தும் அறிந்தவர்கள் என்ற நோக்கில் போதனை செய்த பெரிய மனிதர்கள் என்று அறிய முடிகிறது. இவர்களை பற்றி ஆண்டவர் பல இடங்களில் "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்பதில் ஆரம்பித்து நீங்கள் பிசாசின் பிள்ளைகள் எனவே உங்கள் தகப்பனின் கிரியையை செய்ய விருப்பமாயிருக்கிறீர்கள் என்பது வரை" மிக அதிகமான விமர்சனங்களை கூறி கடிந்துகொண்டுள்ளர். கடைசியில் ஆண்டவரை மரண ஆக்கினைக்குள் தீர்த்தவர்களும் அந்த மகா கணம் பொருந்திய வேதபாரகர் பரிசேயர்கள் தான்! (மத் 20:) அப்படி அவர்களை கடுமையாக கடிந்து கொண்ட ஆண்டவர் அவர்களை கடிந்துகொள்ளும்போது அனைவருக்கும் போதனையாக சொன்ன வார்த்தைதான் நான் தலைப்பாக எடுத்துக்கொண்ட மத்தேயு 5:20.
வேதபாரகர் பரிசேயரை விட நாம் அதிக நீதி செய்யவேண்டுமென்றால் முதலில் அவர்களின் நீதி என்ன என்பதை நாம் அறிய வேண்டும். எனவே என்னால் முடிந்தவரை அவர்களின் நீதி பற்றி விளக்குகிறேன்.
.
1. அவர்கள் வேத வாக்கியங்களை நன்றாக அறிந்திருந்தனர்.
வேதபாரகரும் பரிசேயரும் வேதவாக்கியங்களை நன்றாக அறிந்து வைத்திருந்தனர் என்பதை அவர்கள் மோசேயின் நியமனங்களை சுட்டி காட்டியதிலும், ஆபிரகாம் பற்றி மோசே பற்றி கேள்விகள் எழுப்பியதிளுமிருந்து அறிந்துகொள்ள முடியும். அதுபோல் நாமும் நம் கையில் உள்ள வேதாகமத்தில் முழுமையாக பலமுறை படித்து, ஆண்டவர் வேதத்தின் மூலம் நமக்கு என்ன சொல்கிறார் எதை செய்யலாம் எவற்றை செய்யக்கூடாது என்ற பொதுவான சத்தியத்தை அறியவில்லை என்றால் ஒருகாலும் அவர்களை விட அதிக நீதி செய்ய முடியாது. எனவே முதலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் கையில் உள்ள பரிசுத்த வேதாகமத்தை தொடக்கம் முதல் முடிவுவரை கிரமமாக படித்து ஆண்டவரின் மனவிருப்பம் என்ன என்பதை முதலில் அறியவேண்டும் அதை அறிவயும் வாஞ்சை வர வேண்டும். அரைகுறை படிப்பு, அங்கொன்றும் இங்கொன்றும் படிப்பு போன்றவற்றின் மூலம் வேதத்தின் உண்மை செய்தியை அறிவது கடினம்!
.
2. அவர்கள் வேத வார்த்தைகளின்மேல் வைராக்கியம் உள்ளவர்கள்.
ஆம்! வேதபாரகரும் பரிசேயரும் வேத வாக்கியங்களின் மேல் மிக அதிக வைராக்கியம் உள்ளவர்களாக இருந்தனர் எனவேதான் ஆண்டவராகிய இயேசு அதில் சிறிய மாற்றம் செய்வதைக்கூட அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை! முக்கியமாக ஒய்வு நாளில் ஆண்டவர் சுகமாக்கியதைகூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாமும் நமது கையில் உள்ளவேத வார்த்ததைகள் மீது அறிவுக்கேதுவான வைராக்கியம் உள்ளவர்களாக இருப்பது நல்லது. நமது இஸ்டத்துக்கு ஏற்றாற்போல் வேத வார்த்தைகளை புரட்டாமல், நமக்கு சாதகமாக இருக்கு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, எதிராக இருக்கும் வசனங்களை கண்டுகொள்ளாமல் விடுதல் போன்ற புரட்டுகள் இல்லமால், வேத வார்த்தைகளுக்காக எதையும் இழக்க தயாராக இருக்கும் ஒரு வைராக்கியத்துடன் வாழ்கிறோமா? என்று நம்மை நாமே ஆராய்வது நல்லது!
.
3. அவர்கள் பழைய ஏற்ப்பாட்டில் தேவனிட்ட கட்டளைகளை சரியாக கைகொண்டனர்!
"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி," மேற்கண்ட வார்த்தைகளை ஆண்டவர் வேதபாரகர்களை நோக்கி சொல்வதன் மூலம் அவர்கள் பழைய ஏற்ப்பட்டு கட்டளையாகிய விருத்த சேதனம் பண்ணுதல், தசமபாகம் செலுத்துதல் போன்ற கட்டளைகளை சரியாக கைகொண்டனர் என்பதை அறியமுடியும். நாம் எப்படி? புதிய ஏற்ப்பாட்டில் ஆண்டவராகிய இயேசு சொன்ன போதனைகளில் எத்தனை போதனைகளை நமது வாழ்க்கையில் கைகொள்கிறோம்? என்மேல் அன்பாயிருக்கிரவன் என் வார்த்தைகளை கைகொள்வான் என்று இயேசு தெளிவாக சொல்லியிருக்கிறாரே! அவர் கட்டளையிட்டதுபோல் பிறருக்கு சுவிசேஷம் அறிவிக்கிறோமா? அல்லது நான் நரகத்துக்கு தப்பித்துவிட்டேன் என்று சுய திருப்தி அடைந்துவிட்டு சும்மா இருக்கிறோமா? ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
.
இப்படி வேதபாரகரும் பரிசேயரும் தேவனுடைய வார்த்தைகளை நன்றாக அறிந்து, அதன்மேல் வைராக்கியமாய் இருந்து, அவற்றை கைக்கொண்டு நடப்பதெல்லாம் சாதாரண நீதி என்று இயேசு சொல்லிவிட்டார் ஏனெனில் அவர்களைவிட நம்மிடம் இயேசு அதிக நீதியை எதிர்பார்க்கிறார். உங்கள் நீதி அவர்கள் நீதியைவிட அதிகமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்
சரி இப்பொழுது வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத விஷேசித்தவைகள் எது என்று இயேசு குறிப்பிடார் என்பதை இங்கு பார்க்கலாம்
நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும். (மத்:23)
நீதி, விசுவாசம், இரக்கம் இவை மூன்றும் வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத விசேஷித்தவைகள் என்று இயேசு குறிப்பிட்டுள்ளார் அவற்றை பற்றி சற்று ஆராய்வோம்.
.
நீதி:
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; (சங்:89:14)
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.(சங் 97:2) தேவனுடைய சினகசானத்தின் ஆதாரமே நீதியும் நியாயய்மும்தான் என்று சங்கீதக்காரன் இருமுறை சொல்கிறான். எனவேதான் கர்த்தர் வேதத்தில் அனேக இடங்களில் "நீதியாய் நடவுங்கள்" "நீதி செய்ய படியுங்கள்" "நீதியும் நியாயமும் செய்யுங்கள்" (நீதி 29:3,எரே:22:3) என்று திரும்ப திரும்ப சொல்கிறார்.
உண்மையான நீதி எப்படிப்பட்டது தனக்கு லாபமா நட்டமா, தன் பிள்ளையா பிறர் பிள்ளையா? தன் ஜாதியா பிற ஜாதியா? தன் மதமா, தன் சபையா, தனக்கு வேண்டியவரா? என்றெல்லாம் ஆராய்ந்து நியாயத்தை புரட்டாமல் பணத்தையும் அந்தஸ்த்தையும் அழகையும் பார்த்து மயங்காமல் இவற்றுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு, நியாயமாக செயல்படுவதுதான் நீதியாக நடப்பது ஆகும். வேத பாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உயர்ந்த நீதி நம்மிடம் உள்ளதா என்று ஆராய்ந்து பார்ப்போம்.
.
இரக்கம்!
"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" (புல:3:22) என்று வேதம் சொல்கிறது. "இரக்கப்ப்ட்டுகிறவர் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" என்று இயேசு கூறியுள்ளார். உண்மையான இரக்கம் எப்படிப்பட்டது நல்ல சமாரியன் கதையில் வரும் சமாரியனை பாருங்கள், யாரோ ஒரு அறியாதவனுக்காக தன் பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க முன்வந்தான். ஆண்டவரின் இரக்கத்தை பாருங்கள் நாம் பாவி என்று அறிந்திருந்தும் நமக்காக ஜீவனை கொடுக்க முன்வந்தார். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நம்மிடம் தேவையுடன் வரும் ஜனங்களுக்கு நம்மாலியன்ற உதவி செய்கிறோமா? உதவி செய்ய முடியாவிட்டாலும் நமது முடியாமைக்காக வருந்துகிறோமா? அல்லது "தனக்கு போகத்தான் தானம்" என்ற நல்ல உலக கோட்பாடில் வாழ்கிறோமா? என் காதுகள் கேட்க ஒரு பெரிய சபையின் பாஸ்டர் "என்னை யாராவது தேடி வந்துவிட்டால் ஏதாவது உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது" என்ற சொன்ன வார்த்தையை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை! என்னை பொறுத்தவரை என்னிடம் அனுப்பப்படும் ஒவ்வொருவரும் ஆண்டவரால் அனுப்பபடுகிரவராகவே நான் கருதுகிறேன். வருபவர் மோசமானவர் என்று நாம் அறியாத பட்சத்தில், நமக்கு உதவே செய்ய திராணி இருந்தும் நிராகரிப்பது சரியான சரியான செயல் அல்ல என்றே கருதுகிறேன். நாம் என்ன நோக்கத்தோடு உதவி செய்கிறோம் என்பதை வைத்துதான் ஆண்டவர் அதை அங்கீகரிக்கிராறேயன்றி மற்றபடியல்ல!
இரக்கம் என்பது மஹா பெரியாது! எக்காலத்திலும் யாருக்காகவும் அதவாது தனக்கு அனேக தீங்குகள் செய்த ஒருவனுக்கு கூட மனமுருகுவதுதான் இரக்கம்! விபச்சாரம் செய்தவர்களை கல்லெறிந்து ந்து கொல்லவேண்டும் என்று கூடி நின்ற வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உயர்ந்த இரக்கம் உங்களிடம் உள்ளதா? என்று நம்மை நாமே ஆராய்வோமாக!
.
விசுவாசம்!
தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். (ஆப:2:4)
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.(கலா 3:11)
இந்த வேத வார்த்தைகளை ஆராய்ந்து பார்ப்போமானால் இங்கு "விசுவாசித்தவர்கள் எல்லாம் பிழைப்பார்கள்" என்று எழுதவில்லை எழுதவில்லை. விசுவாசத்தோடு நீதிமானாய் இருப்பவர்கள்தான் பிழைப்பார்கள் என்றே கூறுகிறது. அதாவது நீதிமானாய் இருக்கிறவன் தன் விசுவாசத்தால் பிழைப்பன் என்பதே சரியான பொருள் என்று நான் கருதுகிறேன். இறைவன் என்று ஒருவர் இருக்கிறார், இயேசு நமக்காக மரித்தார், ஆண்டவர் வார்த்தைகள் சத்யமானது, அவர் சொனதை செய்வார் என்றெல்லாம் விசுவாசம் இன்று கிறிஸ்த்தவர்கள் எல்லோருடமும் உள்ளது
தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. (யாக:2:19)
அது தேவைதான்! ஆனால் ஆனால் கிரியை இல்லாத வெறும் விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை என்பதை யாக்கோபு தன் நிருபத்தில் திருப திரும்ப சொல்வதை நாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.
வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? (யாக:2:20)
ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. (யாக 2:26)
இன்றைய காலகட்டங்களில் விசுவாசிகளும் பாஸ்டர்களும் எவ்வகையான விசுவாசம் வைத்துள்ளனர் என்றே புரியவில்லை! எதாவது ஒரு சிறு தலைவலி வந்தால் கூட உடனே உலகிலேயே பெரியவியாதி எதுவோ அது வந்திருக்குமோ என்று பயப்படுவதையும் தடுமாறுவதையும் பலமுறை பார்க்க முடிகிறது. அவர்கள் பயந்தது போலவே மிகபெரிய வியாதிகள் அவர்களை தாக்குகிறது. இது ஏன? விசுவாசமின்மை அல்லவா? தேவன் மேலுள்ள விசுவாசம் எங்கே போனது? எதுவும் புரியவில்லை. பயம் இருக்கும் இடத்தில் விசுவாசம் இல்லை! அசைக்க முடியாத மிக உயர்ந்த விசுவாசந்த்தை ஆண்டவர் ஒருவரால் மட்டுமே தரமுடியும். அதை அடைய நாம் அவர் சித்தப்படி வாழ வேண்டும். அவருக்கு முழுமையாக கீழ்படிய வேண்டும் அப்பொழுது மட்டுமே வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உன்னத விசுவாத்தை நாம் பெறமுடியும்.
.
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவா 15:5) என்று நமக்காக பரிதபித்து, ஜீவனை கொடுத்து ஆண்டவர் பெற்றுதந்துள்ள பரிசுத்த ஆவியின் பெலத்துடன் இன்றே முயற்சி செய்வோம் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கும் உன்னத நிலயை அடைவோம்!
நன்றி!




Friday, February 6, 2009

பாஸ்டர்கள் கவனத்திற்கு!

இந்த கடைசி காலங்களில் ஒருசில தேவ ஊழியர்களை தவிர தரமான உழியர்கள் குறைந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. அனேக கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என்ற ஆண்டவரின் வார்த்தைகள் மெய்யாகி வருகின்றன.

ஒரு மேய்ப்பனானவன் ஆடுகளுக்கு உத்திரவாதி என்பதை வேதம் மிக தெளிவாக போதிக்கிறது! எனவேதான் நீதிமொழிகள்:

"உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு (நீதி: 27:23) என்று போதிக்கிறது.

ஒரு மேய்ப்பவனுக்கு ஆடுகள் மேல் அளவற்ற கரிசனை மற்றும் ஆபத்தில் அவற்றை பாதுகாக்கும் மன பக்குவம் இல்லாமல், கொழுத்ததை அடித்து சாப்பிடும் நோக்கத்தோடு மந்தையை மேய்க்க வருபவர்கள் (எதோ பிழைப்புக்காக பாஸ்டராக வருபவர்கள்) மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் என்றே கருதுகிறேன். உங்களை பார்த்து கர்த்தர் சொல்லும் வார்த்தைகள் மிக கடுமையானது!

தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! (எசே: 34:2) மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள். (எரே: 25:34)

இதை படிப்பவர்கள் உடனடியாக நான் அப்படிப்பட்ட ஒரு பாஸ்டர் இல்லை என்று கருதலாம்! ஆனால் எனது கருத்துப்படி தனது சபையில் ரூபாய் 10 காணிக்கை போடும் ஒரு விசுவாசி நடந்து போகும் போது, அவரின் காணிக்கையையும் வாங்கி வாழ்க்கை நடத்தும் ஒரு பாஸ்டர் அவரை கடந்து பைக்கில் கம்பீரமாக போவது சரியல்ல என்றே கருதுகிறேன். அதாவது அவரின் வாழ்க்கை தரத்துக்கு கூடிய ஒரு வாழ்க்கை தரத்தில் வாழக்கூடாது என்பதே எனது கருத்து! அதுதான் கிறிஸ்த்துவும் ஆதி அப்போஸ்தலரும் வாழ்ந்து கட்டிய கிறிஸ்த்தவ வாழ்க்கை ஆகும்.

பவுலடியாரின் வாழ்க்கை நிலையை பாருங்கள்:

  • அவர் ஒரு சொந்த வீடு வைத்து நிலையாக வாழவில்லை
  • அவர் திருமணம் செய்துகொள்ள வில்லை
  • அவர் எதையும் தனக்காக சேர்த்து வைக்கவில்லை
  • அவர் எப்பொழுதும் இயேசுவுக்காக ஜீவனை கொடுக்க தயாராக இருந்தார்
  • அவர் உலக இன்பம் எல்லாவற்றயும் குப்பையாக நினைத்து ஒதுக்கினார்
  • அவர் இயேசுவின் சுவிசேஷம் ஒன்றே தன் உயிர் மூச்சாக நினைததார்
  • அவர் அவர் எல்லோரும் கழித்து போடும் அழுக்கை போல வாழ்ந்தார்
  • அவர் அடிபட்டு, வையப்பட்டு, நிர்வாணப்பட்டு சுவிசேஷம் சொன்னார்.
  • அவர் தனது உயிருக்காக ஒருபோதும் பயந்தது இல்லை.

நல்ல வசதியாக எல்லா சுகத்தையும் அனுபவித்து வாழ விருப்பமா? சொத்து சேர்த்து தலைமுறைக்கும் வைத்து விட்டு போக ஆர்வமா? உழைத்து சம்பாதித்து அவரவர் பணத்தில் வாழுங்கள் அது தவறு இல்லை. ஆனால் அடுத்தவரின் காணிக்கையில் ஐந்து ரூபாய் செலவழிக்கும் முன் ஐம்பத்து முறை யோசியுங்கள் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன். எனவேதான் வேதமும்:

என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. (யாக்: 3:1) என்று எச்சரிக்கிறது.

மந்தைக்கு மேய்ப்பராக இருப்பவர்கள் மந்தையை எப்படி மேய்க்க வேண்டும் என்பதற்கும் எப்படி ஒரு முன் மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து காண்பிக்க கடமைப்பட்டுள்ளப்னர் என்றும் வேதம் தெளிவாக கூறுகிறது: .

உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள் ( பேதுரு 5:2)

ஏனெனில் போதிப்பவர் பொய் சொல்லாதவராக, பொறாமை, பண ஆசை, வஞ்சம் இல்லாதவராக இருந்தால்தான் மட்டும்தான் துணித்து உறுதியாக பொய் சொல்வது தவறு என்று போதிக்க முடியும். மற்றபடி உங்கள் ஜெபத்தால் வியாதிகள் குணமாகலாம், அனேக அதிச அற்ப்புதங்கள் நடக்கலாம், ஏன் உங்கள் பின்னால் ஒரு மிகப்பெரிய கூட்டமே இருக்கலாம் இவற்றில் எதுவும் ஒருவரை ஆடவரின் ராஜ்யத்துக்கு தகுதியுள்ளவராக மற்ற முடியாது. அதனால் நித்யத்துக்கு எந்த பலனும் இல்லை என்றே நான் கருதுகிறேன். நமது வாழ்க்கை நிலை ஆண்டவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல இல்லை என்றால் நாளை ஆண்டவர் நம்மை பார்த்து

நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லுக்: 13:27) என்று சொல்ல நேரிடலாம்.


Labels: