கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Friday, June 27, 2008

பிலேயாமை போல பிழை செய்யாதீர்கள்!

அன்பு சகோதரர்களே கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!

இஸ்ரவேல் கோத்திரத்தார் அல்லாதவரும், வேத புத்தகத்தில் ஏறக்குறைய 60 முறை பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவருமான, பிலேயாமை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இவர் ஒரு புரஜாதியை சேர்ந்தவராக இருந்த போதிலும் இவரை பற்றி தியானிக்கும் போது, இவரின் பல அனுபவங்கள் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்ததோடு, தேவன் எல்லோரையும் சமமாகவே பார்க்கிறார் என்பதையும் அவரிடம் பட்சபாதம் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

வேத புத்தகத்தில் நான் படித்த புற ஜாதி மனிதர்களில் மிகவும் மேன்மையானவன் என்று நான் எண்ணும் இந்த " பேயோரின் குமாரனாகிய பிலேயாமிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அநேகம் இருத்தாலும், முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

பிலேயாமின் மேன்மை - 1

நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; (எண்:22:6)

இந்த வார்த்தைகள் பிலேயாமை பார்த்து பாலக் ராஜா சொன்னது.

"உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னை சபிப்பவர்களை சபிப்பேன்" என்று கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுத்தது அனைவரும் அறிந்ததே! ஆனால் இங்கு பிலேயாமுடைய அபிஷேகமோ வேறுவிதம். அவர் யாரை ஆசீர்வதித்தலும் அல்லது சபித்தாலும் அது அப்படியே நடக்குமாம். கிட்டதட்ட ஒரு தேவ வாக்கை போல இருக்குமாம். இது எவ்வளவு மேன்மை பாருங்கள். அவன் இஸ்ரவேலை ஆசீர்வதித்தான் அது அப்படியே நடந்தது அல்லவா?

தேவ ஆவியானவர் ஒருவர் மீது வரும் பொது மட்டும்தான் இதுபோல் நடக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே இது மிகவும் மேன்மையானதே!


பிலேயாமின் மேன்மை - 2

தேவ ஆவி அவன்மேல் வந்தது. (எண்:24:2)

அன்பானவர்களே!

"தேவ ஆவியை பெற்ற இவனைபோல மனிதன் யார்" என்று பார்வோனால் புகழப்பட்ட யோசேப்பை தவிர தேவ ஆவியானவர் புறாவைபோல நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்த்துமேல் தான் இறங்கினார்.

அப்படி இருக்க,

தேவ ஆவி அவன் மேல் வந்தது என்று வேத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு புறஜாதி மனிதன் பிலேயாமே!

தேவ ஆவியானவரின் அபிஷேகத்தை அனுபவித்து பார்த்தவர் மட்டும்தான் அதன் மேன்மையை அறிய முடியும்.

அந்த மேன்மையான அப்சிஷேகத்தை பெற்றவன் பிலேயாம்.

பிலேயாமின் மேன்மை - 3

கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, (எண்:24:3,15)

எசாயா தீர்க்கன் சொல்லும் வார்த்தையாகிய "இந்த ஜனங்கள் கண்ணிருந்தும் காணாமல் ..........மூடிப்போடு" என்ற வசனப்படி மூடப்பட்ட கண்கள் திறக்கப்பட்ட அனுபவம் உடையவர்கள் எத்தனைபேர் உள்ளனர் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் அந்த அனுபவத்துக்குள் கடந்து சென்றிருக்கிறேன்.

நமது மாமிச கண்களுக்கு மேலான ஒரு கண், அதாவது மாமிச கண்களால் காண முடியாததை பார்க்கும் தேவனின் கண்கள் அது என்று கூட கூறலாம்.
"கர்த்தர் ஆகாரின் கண்களை திறந்தார்" அப்பொழுது அவள் சாதரண கண்ணால் பார்க்க முடியாத தண்ணீரை அவளால் பார்க்க முடிந்தது. பிலேயாம் கண்ணை திறந்தபோது "கர்த்தரின் தூதனை" பார்க்க முடிந்தது. எலிசாவின் வேலைக்காரன் கண்களை திறந்த பொது "கர்த்தரின் சேனையை" பார்க்க முடிந்தது. இது போல் பல சம்பவங்களை கூற முடியும்.

ஆனால் இங்கு பிலேயாமின் திறக்கப்பட்ட கண்களுக்கு தெரிவது என்ன? தீர்க்கமான எதிர்காலம்! அதை அபடியே பார்த்து அவன் தரிசனம் சொல்வதை பின்வரும் வசனங்கள் சொல்கின்றன அவ்வளவு மேன்மை மிக்கவன்.

பிலேயாமின் மேன்மை - 4

தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார்(எண்:8:9)

"அப்படியானால் எனக்கு எப்படியோ" என்று கர்த்தரிடம் விசாரிக்க போன ரேபாக்காளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், அது போல் "யுத்தத்துக்கு போகலாமா" என்று கர்த்தரிடத்தில் விசாரித்த ராஜாக்களை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்

ஆனால் "உன்னிடத்தில் வந்திருப்பவர்கள் யார்" என்று தேவன் வந்து விசாரிக்கும் அளவுக்கு ஒருவர் இருந்தார் என்றால் அவர் பிலேயாம் தான். ஆ எவ்வளவு மென்மையான ஓன்று!

இவ்வளவு மேன்மை உள்ள "பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள். (எண்:31:8)


ஒரு அற்ப மனிதனை போல் மடிய அவன் செய்த பிழை தான் என்ன?

பிழை - 1 தீமையான ஆலோசனை வழங்குதல்

வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தை (வெளி:2-14)

பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; (எண்:31:16)

அன்பானவர்களே ஒருவருக்கு தீய ஆலோசனை வழங்குவது எவ்வளவு தவறானது என்பதை அறிய வேண்டும் என்றால் அதற்க்கு பிலேயாம் ஒருவரே மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்று கூறலாம்.

"கர்த்தருடைய ஜனங்களை அழிக்க அவர்களை பாவத்தில் விழவைக்க வேண்டும்" என்ற ஒரு தீய ஆலோசனையை போற போக்கில் சாதாரணமாக சொல்லிவிட்டு போனது அவன் செய்த மிக பெரிய பிழை.

இன்றும் உலகில் இதுபோல் ஆலோசனை சொல்லும் அநேகரை பார்க்கலாம்.

  • வக்கீல்கள் கேசை ஜெயிப்பதற்கும்
  • ஆடிட்டர்கள் வரியை ஏய்ப்பதற்கும்
  • அரசாங்க அதிகாரிகள் பணம் சம்பாதிப்பதற்கும்
  • அரசியல் வாதிகள் மென்மையாய் வாழ்வதற்கும்

இன்னும் என்னென்னவோ காரணங்களுக்காக தவறான ஆலோசனைகள் உலகில் மிக சுலபமாக வழங்கப்படுகின்றன.

தேவன் இவைகளை கடுமையாக வெறுக்கிறார், எனவே தேவ பிள்ளைகளாகிய நாம் யாருக்கும் இப்படி தவறான ஆலோசனை சொல்வதில் இருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது.

பிழை - 2 - வெளிவேஷம் போடுதல்

பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது. (எண்:22:18)

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; (எண்:24:12)


என்று எதோ பெரிய பரிசுத்தவான் போல வெளி வேஷம் போடுகிறான். ஆனால் பாலாக் அநீதத்தின் கூலியை விரும்பினான் என்று கீழ்க்கண்ட வசனங்கள் தெளிவாக சொல்கிறது

பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி,செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி, தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்;2பேது 2:15

இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி,(யூதா 1:5)


இவ்வளவு மேன்மையான மனிதர் இப்படி வெளி வேஷம் போட்டது இரண்டாவது பிழை.

உங்கள் மனதில் என்ன உண்டு என்பதை திறந்து வெளிப்படையாக சொல்லுங்கள தண்டனை இல்லை. மேலும் தவறு இருக்குமாயின் திருத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு.

ஆனால் உள்ளொன்றும் புறமொன்றும் வைத்து பேசும் ஒருவர் ஒருநாளும் திருந்தவே முடியாது எனவே ஆண்டவர் இதை வெறுக்கிறார். உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் என்பது ஆண்டவரின் கட்டளை.

ஆனால் இன்றும் உலகத்தில் இதைபோல், மனமெல்லாம் பொருளாசையால் நிறைந்து வெளியில் பரிசுத்தமாக பேசும் அநேகரை பார்க்க முடியும். ஏன் உழியகாரார்களை கூட பார்க்க முடியும். ஆண்டவர் இதை கடுமையாக வெறுக்கிறார் என்பதற்கு பிலேயாமின் முடிவு நல்ல படம்.


பிழை - 3 தேவன் வேண்டாம் என்று சொன்ன காரியத்தம் மீண்டும் மீண்டும் விசாரிப்பது

கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.
(எண்:22:19)
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். (எண்:22:22)


அன்பானவர்களே!

இங்கு ஒரு முக்கியமான பாடம் உள்ளது. அதாவது தேவன் ஒரு முறை வேண்டாம் என்று சொன்ன காரியத்தை நாம் மீண்டும் மீண்டும் அவரிடத்தில் விசாரிப்பது சரியானது அல்ல. இன்று நம்மில் அநேகர் இந்த தவறை செய்கிறோம்.

"என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை (ஆதி 6:3) என்ற கர்த்தர் மனிதன் விரும்பி கேட்கும் ஒற்றை போராடி தடுப்பவர் அல்ல. அவன் போக்கிலே விட்டு அதனால் வரும் தீமை என்னவென்பதை அவனையே உணர வைப்பவர்.

எனவே எந்த ஒரு உலக பொருளுக்கும் சுகத்துக்கும் விடாப்பிடியான ஜெபம் நல்லதல்ல என்பது எனது கருத்து. பவுல் அவர்கள் கூட தன் உடம்பில் உள்ள முள் குறித்து ஜெபித்து பார்த்துவிட்டு பிறகு விட்டுவிட்டார் என்று பார்க்கிறோம்.

எனவே தேவன் ஒரு முறை வேண்டாம் என்று சொன்ன காரியத்தை பிலேயாம் மீண்டும் விசாரித்தான். எப்படியாவது போக வேண்டும் என்ற அவனின் மனதில் இருந்த வேகத்தை பார்த்த தேவனும் அவனுக்கு போகும் படி உத்தரவு கொடுத்தார் ஆனால் அது அவருக்கு பிரியமல்ல என்பதையும் வழியில் தந்து தூதனை அனுப்பி தெரிவித்தார்.

எனவே அன்பானவர்களே தேவனின் சித்தம் என்ன என்பதை சரியாக அறிந்து அதன்படி செயல்படுவது மட்டுமே நல்லது.

பிலேயாமின் மேன்மையை பார்க்கும் பொது அவன் செய்த பிழைகள் மிகவும் சாதரணமானவைகளே. ஆனால் பிழை என்ன என்பதை விட யார் செய்கிறார்கள் என்பதுதான் ஆண்டவரின் தண்டனையை தீர்மானிக்கும். மோசே செய்த தவறு பெரியதல்ல ஆனால் தேவனை முக முகமாக அறிந்த மோசே செய்தது தான் தவறு.

"எவனுக்கு அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் கேட்கப்படும்" இதுபோல் எவருக்கு அதிக தரிசனமும் தேவனின் நெருங்கிய உறவும் இருக்கிறதோ அவர் செய்யும் ஒரு சரிய தவறு கூட கடுமையான தண்டனையை தரும என்பது வாழ்வில் நான் அறிந்த பாடம் "எஜமானின் சித்தம் அறிந்தும் அதபடி செய்யாதவன் அதிக அடிகளுக்கு பாத்திரவான்" என்ற ஆண்டவரின் வார்த்தையை நினைவு கொள்ளுங்கள்.

கர்த்தரின் சித்தம் அறிந்து அதன்படி வாழ நம்மை ஒப்புகொடுப்போம்

நன்றி!

Thursday, June 5, 2008

பேரண்டத்தின் ஆரம்பமும் தற்போதைய நிலையும்!

இந்த பேரண்டத்தில் முதலில் தோன்றியது எது?

இந்த பேரண்டத்தில் ஒன்றுமே இல்லாதபோது முதல் முதலில் தோன்றியது வெறும் ஆவி எனப்படும் காற்று மட்டும்தான்.


இந்த உலகில் உள்ள எல்லா பொருளுக்கும் அடிப்படையாய் ஆதாரமாய், எல்லா உயிரினங்களுக்கும் மூலமாய் மூச்சாய் இன்றுவரை இருக்கும் காற்று எனப்படும் ஆவிதான் முதல் முதலில் தோன்றியது. இரண்டு காற்றுகள் சேர்ந்தால் நீராகிறது, நீர் உரைந்தால் ஐஸ் ஆகிறது ஐஸ் கரைந்தால் மீண்டும் ஆவியாகிய முதல் நிலையை வந்தடைகிறது . அதாவது திட, திரவ, வாயு மூன்று நிலையிலும் அது ஒரே நேரத்தில் இருக்கும் தன்மை கொண்டது.

மலை போல எவ்வளவு பெரிய உருவம் இருந்தாலும், ஆவி என்னும் உயிர் இல்லை என்றால் அதனால் எதுவுமே செய்ய முட்யாது. எந்த ஒரு உயிரினத்தின் உடம்பையும் இயக்குவது ஆவி என்னும் உயிர்தான் அது ஆதியில் தோன்றியே ஆவியின் ஒரு பகுதியே!

இரண்டு விதமான ஆவிகள்!

அந்த ஆவியானது தோன்றும் போதே அளவில்லா வல்லமையுடன் இரண்டு விதமாகவும் இருந்தன.

1. படைக்கும தன்மையும், பகுத்தறியும் தன்மையும் உள்ள நல்லதையே செய்யக்கூடிய பரிசுத்தமான ஆவி.

2. பகுத்தறியும் தன்மை அற்ற, படைத்ததை கெடுக்கும் தன்மையுள்ள தீமையையே செய்யக்கூடிய தீய ஆவி.


இவை இரண்டும் தான் இந்த பேரண்டத்தில் முதல் முதலில் தோன்றியவைகள்.


நல்ல ஆவியின் படைப்புகளும் தீய ஆவிகளின் அழிப்புகளும்:-


படைக்கும் தன்மை உள்ள நல்ல ஆவியானது தனது வல்லமையால் இந்த பிரபஞ்சத்தையும் அதில் வாழக்கூட்டிய பல்வேறு உயிரினங்களை படைத்த போதெல்லாம், தீய ஆவியானது அதனுள் புகுந்து அந்த படைப்புகளை கெடுப்பது அழிப்பது போன்ற தீய செயல்களை செய்துவந்தது.

ஒரு ஓவியன் தனக்குள்ள திறமையை வைத்துக்கொண்டு சும்மா இருக்கவே மாட்டான். எதாவது ஒன்று வரைந்துகொண்டே இருப்பான். அதுபோல தன்னிடம் உள்ள வல்லமையால் எதாவது ஒரு நல்லதை செய்யவேண்டும் என்று நினைத்த நல்ல ஆவியானது, பல முறை வெவேறு விதமாக உலகங்களை படைத்தும் தீய ஆவியினால் அது கெடுக்கப்பட்டது. அப்படி இந்த உலகம் பலமுறை படைக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் டயநோசரஸ்கள் மட்டுமே வாழ்ந்த ஒரு ஒரு காலம் ஆகும்.

.

நல்ல ஆவியை போலவே தீய ஆவியும் வல்லமை உள்ளதாக இருந்ததால் நல்ல ஆவியால் தீய ஆவியை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே வேதனை அடைந்த நல்ல ஆவியானது, தனது பகுத்தறிவால் தீய ஆவியை எப்படியாவது தான் உள்ள இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு விரட்ட திட்டம் தீட்டியது.


தீய ஆவியை அடைக்க நல்ல ஆவி தீட்டிய திட்டம்:

ஆவியை பொதுவாக ஒன்றுமே செய்ய முடியாது அதாவது காற்றை யாராலும் அழிக்க முடியாது. ஆனாலும் அதை சிறு சிறு துண்டுகளாக பிரிப்பதன் மூலம் அதன் வல்லமையை குறைக்க முடியும் என்று அறிந்த நல்ல ஆவியானது, தீய ஆவியை சிறுசிறு துண்டுகளாக பிரித்து பின் தனியாக ஒரு இடத்தை உருவாக்கி அதில் அடைத்து வைக்க திட்டம் தீட்டியது.


அந்த திட்டத்தின் நிறைவேருதலும், நல்ல ஆவிக்கும் தீய ஆவிக்கும் நடக்கும் மிகப்பெரிய போராட்டம்தான் அன்றில் இருந்து இன்று வரை நாம் காணும் இந்த உலகத்தின் நீண்ட வரலாறு ஆகும்.

இதில் நல்ல ஆவி என்பது இறைவன் என்றும் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறது.


தீய ஆவி என்பது அசுத்த ஆவிகள் ஆகும், அதனுடைய வேலை பொதுவாக இரத்தம் உருஞ்சுவது அல்லது எதாவது கெடுதல் செய்வது கொல்லுவது அழிப்பது போன்ற செயல் செய்வதே.

அதிக சக்தி உள்ள மனிதர்கள் சிருஷ்டிக்கபடுதல்:

உருவாக்கும் வல்லமை உள்ள இறை ஆவியானது தனது திட்டப்படி அசுத்த ஆவியை அடைப்பதற்கு மூன்று அடுக்கு உள்ள பாதாளத்தை உருவாக்கியது. மேலும் தனது வல்லமையால் மிகவும் சக்தி வாய்ந்த அவதார புருஷர்களையும், தேவர்கள் எனப்படுபவர்களையும் சிருஷ்ட்டித்தது. அந்த புருஷர்கள் நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்க முடியும் அவர்களுக்கு சதையும் எலுமபும் உள்ள உடம்பு கிடையாது . இவர்களே தேவ புத்திரர்கள் எனப்படுகின்றனர். இதில் ஒருவர் எல்லோரையும் விட பெரியவர் அதாவது எல்லோருக்கும் தலைவர் ஆவார்.

அசுத்த ஆவிகளை சிறுசிறு துண்டாக்கவும் பின்பு அவற்றை பாதாளத்தில் வைத்து அடைக்கவேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்ட இந்த மனிதர்கள் தேவ புத்திரர்கள் எனப்பட்டனர். இறைவன் திட்டப்படி அந்த தேவ புத்திரர்கள் அரக்கர்களாக மாறிய அசுத்த ஆவிகளை அழித்து அவற்றை சிறு சிறு கொசுக்கள் மூட்டை பூச்சிகள் சிலந்திகள் போன்ற இரத்தம் உறுஞ்சும் சிறு பிராணிகளாக மாற்றிய போதிலும், தாங்களும் அந்த அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்டு மிக மிக மோசமான காரியங்களை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்படி தேவ புத்திரர்களுக்கு இடையே போட்டி, பொறாமை, வஞ்சம், காமம் தலை விரித்து ஆட ஆரம்பித்தது. அப்பொழுதே தேவன் தேவபுத்திரர்களின் மீடுபுக்காக தன் வல்லமையின் ஒரு பகுதியை மனிதனாக பிறக்கசெய்து அவர்களின் பாவங்களுக்கு பலியாக, மீட்கும் பொருளாக கொடுக்கும் மீட்பின் திட்டத்தை முன்குறித்துவிடார்.


இதனால் இறைவன் இந்த தேவபுத்திரகளை விட்டு பிரிந்து, முதல் வானம் இரண்டாம் வானம் மூன்றாம் வானம் என்று ஏற்படுத்திக்கொண்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் இறைவன் மிகவும் பரிசுத்தர். அவர் பரிசுத்தராக இருப்பதால்தான் அவரை இறைவன் என்று சொல்கிறோம். அசுத்தம் அவரை நெருங்க முடியாது மேலும் அசுத்தம் உள்ள இடத்தில் அவரால் இருக்கவும் முடியாது.
.

ஆகினும் தேவ புத்திரர்களுக்கும் இறைவனுக்கும் தொடர்புக்காக தேவ தூதர்கள் படைக்கப்பட்டனர். இவர்கள் இறைவனின் கட்டளைப்படி உலகில் தேவ புத்திரருக்கு உதவியாக இருந்துவந்தனர்.
.

தேவ தூதனின் வீழ்ச்சி!
தீமை என்னும் அசுத்தமானது, எதையும் கெடுக்க வல்லதாக இருந்தது. ஒரு துளி சாக்கடை நீர் எப்படி ஒரு கிளாஸ் தண்ணீரை கெடுத்து விடுமோ அதுபோல ஒரு சிறிய அளவு அசுத்த ஆவி ஒருவருள் வந்தாலும் அவர் இறைவனிடம் போக முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

அதுபோலத்தான் தேவன் படைத்த மூன்று கூட்ட தூதர்களில் அடிக்கடி பூமி வந்துபோகும் லூசிபர் என்னும் ஒரு தூதன் அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டு தான் இறைவனை போல ஆகவேண்டும் என்றும் இறைவனின் சிங்காசனத்துக்கு மேலாக தனது சிங்காசனத்தை உயர்த்தவேண்டும் என்றும் மனதில் நினைத்தான். அப்படி நினைத்த மாத்திரத்தில் அவனும், அவனை சேர்ந்த ஒரு கூட்ட தூதர்களும் தேவனால் ஆகாதவன் என்று தள்ளப்படார்கள்.

தேவதூதனாகிய லூசிபரின் விழ்ச்சி இறைவனுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது! ஏனெனில் அவன் தேவனிடம் அனேகநாட்கள் இருந்ததால் தேவனை போலவே எல்லா காரியங்களையும் செய்ய வல்லவன். அவனை எப்படியாவது திருத்த வேண்டும் என்று எதேன் தோட்டத்தை படைத்து அதில் அவனை இறைவன் வைத்தார்.

ஆனால் தேவன் தன்னை ஆகதவன் என்று தள்ளியதால் மிகவும் ஆத்திரம் அடைந்த லூசிபர், மனம் திரும்பி ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பாமல், எப்படியாவது தேவனுடைய இடத்தை பிடிக்க வேண்டும் அல்லது இந்த உலகத்தயாவது தான் தேவனை போல இருந்து ஆட்சி செய்யவேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

ஆதம் ஏவாளின் படைப்பு :
இந்நிலையில் ஆதாம் ஏவாள் இருவரையும் மண்ணினால் இறைவன் படைத்து லூசிபர் இருக்கும் அதே எதேன் தோட்டத்தில் கொண்டு வைத்து அதை பண்படுத்தவும் பாதுகாக்கவும் வைத்தார். இறைவன் ஆதாம் ஏவாளை படைத்ததற்கு முக்கிய நோக்கம் தேவபுத்திரர்கள் மற்றும் விழுந்துபோன தேவதூதர்கள் எல்லோரையும் அசுத்தத்தில் இருந்து மீட்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தான். தேவனின் மீட்பின் திட்டமானது இரண்டு வகையாக இருந்தது ஆதாம் ஏவாள் பாவத்தில் வீழாமல் இருதால் லூசிபராகிய விழுந்துபோன தேவதூதனுக்கு அவர்கள்மேல் அதிகாரம் இல்லாமல், அவர்கள் மகிழ்ச்சி நிறைந்த, துன்பமற்ற ஒரு வாழ்வை நித்யமாக பெறும்படியும், வீழ்ந்துவிட்டால் தனது வார்த்தை என்னும் வல்லமையை ரட்ச்சகராகிய பூமிக்கு அனுப்பி அனைவர் பாவங்களுக்காக மரித்து அவர் இரத்தத்தின் மூலமாக அனைவருக்கும் மீட்பும் கிடைப்பதாக இருந்தது! ஏனெனில் இரத்தம் என்பது உயிராகவும் அது ஒரு கிரயதொகையாகவும் அதை அசுத்த ஆவிகளுக்கு கொடுப்பதன் மூலம், அசுத்தத்தின் பிடியிலிருக்கும் ஆத்துமாகளை மீட்க முடியும். அதன் அடிப்படையில்தான் இன்றும் இந்து கோவில்களில் சிலவற்றில் உயிர் பலிகள் செலுத்தப்படுகின்றன

அனால் நாமறிந்ததுபோல் ஆதாம் ஏவாளும் ஆண்டவரின் சொல்லுக்கு கீழ்படியாமல், சாத்தானின் வஞ்சக வலையில் மிக சுலபமாக வீழ்ந்து, இறைவன் புசிக்க வேண்டாம் என்று சொன்ன கனியை புசித்ததன் மூலம் தானும் சாத்தனுக்கு அடிமைகளாகி போனார்கள்.

இறைவன் என்னும் நல்ல ஆவியானது தீமை இல்லாத ஒரு நல்ல உலகத்தை அமைத்து எல்லையில்லா இன்பத்தை அனுபவித்து மனிதன் என்றென்றும் வழவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் அன்றில் இருந்து இன்று வரை எல்லாவற்றையும் செய்து வருகிறது. ஆனால் நல்லவைகளாக படைக்கப்பட்ட எல்லாமே தீமைக்கு அடிமையாக போய்விட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று உலகில் பிறக்கும் எல்லோரும் பாவத்தில் சாத்தானின் அடிமையாக பிறக்கிறோம். சிறு குழந்தைக்கு கூட பாவம் செய்ய சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்லை. அது தானாக பொய் சொல்லும் தானாக திருடும். ஒரு கிளாஸ் காப்பியை கெட்டுபோக வைப்பதற்கு நான் எந்த ஒரு பெரிய முயற்சியும் எடுக்க வேண்டியது இல்லை. புதியதாக போட்டு ஒருநாள் மேஜை மீது வைத்துவிட்டாலே தானாக கெட்டுவிடும்! அதுபோல், இந்த உலகசூழல் மற்றும் நமது உடம்பின் தன்மை, நாம் விரும்பினாலும் விரும்பவிடலும் எல்லோரையும் பாவியாக்கிவிடுகிறது! நாமும் பாவம் செய்யக்கூடாது என்றுதான் நினைக்கிறோம் ஆனால் அப்படி வாழ முடிவதில்லை! எதாவது இடங்களில் தவறி விடுகிறோம் . இறைவன் எல்லோரையும் நல்லவராகத்தான் படைத்தார் ஆனால் இன்று நாம் தீயவர்களாக மாறியிருப்பது யாருடைய தவறு?

சாத்தன் லூசிபரின் ஆட்சி:-
என்று ஆதமும் ஏவாளும் பாவம் செய்தார்களோ அன்றிலிருந்து சாத்தான் இந்த பூமியில் தனது ஆதிக்கத்தை தொடங்கிவிட்டான். மனம் திரும்புவான் என்று எதிர்பார்க்கப்பட்ட தேவதூதன் இறைவனுக்கு மிக பெரிய எதிரியாக நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று தேவனுக்கு எதிரான கடின நிலையை அடைந்தான்.

அசுத்த ஆவிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அவைகளை அடைத்து வைக்க தேவனால் உருவாக்கப்பட்ட பாதாளத்தை தனது உறைவிடமாக கொண்டுள்ள சாத்தான் ஆண்டவரின் சந்நிதிவரை சென்று வரும் வல்லமை படைத்தவனாக இருந்தான்.


முதல் மனிதனாகிய ஆதாம் இறைவனின் வார்த்தைகளை மீறி புசிக்க கூடாது என்ற கனியை புசித்து சாத்தானின் அடிமை ஆகிவிட்டதால் அவன் சந்ததியாகிய எல்லா மனிதர்களும் தொடர்ந்து சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் பிறக்கின்றனர். அந்த மனிதர்களுக்கு பூமியில் முடிந்த அளவு துன்பங்களை கொடுத்தும், முடிவில் மரித்த உடன் அவர்களை தன்னுடைய இடமாகிய பாதளம் கொண்டு சென்று நித்ய நித்யமாக துன்புருத்துவதன் மூலம் இறைவனுக்கு தாங்கொண்ணா மனவேதனையை கொடுத்துக்கொண்டே இருப்பது தான் இவன் திட்டம்.


இன்றுவரை அவன் நினைத்ததுபோல உலகத்தின் அதிபதி போல உலகத்தின் தேவனாக இருந்துகொண்டு அந்த லூசிபர் என்ற சாத்தனை ஆட்சி செய்து வருகிறான்.ஆனால் தீமையை அழிக்க இறைவனால் படைக்கப்பட்ட எல்லோரும் தங்கள் எதற்கு படைக்கப்பட்டோம் என்று கொஞ்சமும் கவலை இல்லாமல் தீமைக்கு அடிமையாகி இறைவனை விட்டு பிரிந்து தங்கள் விருப்பம் போல வாழ்ந்து வருகின்றனர்.

இறைவனின் எதிர்பார்ப்பும் அவர் திட்டத்தின் முடிவும் :

இறைவன் ஒவ்வொரு மனிதனை படைக்கும் போதும் இவன் என் சித்தம் செய்துவிட மாட்டானா, இவன் என் சித்தம் செய்துவிட மாட்டானா என்று தான் படைக்கிறார் ஆனால் அவன் வளைந்து முழு நிலையை அடையும் பொது இறைவனை தேடி அவர் சித்தப்படி வாழ்ந்து தீமையை ஜெயிக்க முயல்வதை விட தான் எப்படி உழைத்து இந்த நிலை இல்லா உலகத்தில் இன்பமாக வாழலாம் என்றே யோசிக்க ஆரம்பிக்கிறான்.

தீய ஆவி மனித ஆவியோடு இணைத்து இருப்பதால் அதை தனியே பிரித்து பாதளம் அனுப்புவது என்பது முடியாது அது யாருடன் இருக்கிறதோ அவனையும் சேர்த்துக்கொண்டு பாதளம் போய்விடும். தீய ஆவியின் நோக்கமும் அதுதான் மனிதனோடு இணைந்து இருக்கும் வரை இறைவனால் தனை ஒன்றும் செய்ய முடியாது ஏனெனில் இறைவன் இரக்கம் உள்ளவர் அவர் ஒரு மனிதனைகூட பாதாளத்துக்கு அனுப்பி தீய ஆவியுடன் நித்யமாக அடைக்க மாட்டார் என்ற எண்ணத்தில் உள்ளது.

இந்த தீயதையும் நல்லதையும் தனியே பிரிக்கவே இறைவன் என்னும் மாபெரும் வல்லமையின் ஒரு பகுதி பூமிக்கு மனிதனாக வந்து தீய ஆவிகளால் மிககொடூரமாக தாக்கப்பட்டு மரித்து, இந்த உலகில் தனது பரிசுத்தமான ஆவியின் ஒரு பகுதியை மனிதனுக்கு கொடுத்துள்ளது.

அது அந்த பரிசுத்த ஆவியானது இறைவனை வாஞ்சையோடு தேடும் எல்லோருக்குள்ளும் வந்து தங்கி அசுத்தத்தை தனியே பிரிக்க உதவி செய்யும். அதன் துணையுடன் யாராவது ஒருவர் அசுத்தத்தை முற்றிலும் ஜெயித்தால் அசுத்தத்திற்கு மனிதன்மேல் அதிகாரம் இல்லாமல் போய் தனியாக பிரிந்துவிடும் அப்பொழுதுதான் அசுத்த ஆவியானது பாதாளத்தில் அடைக்கப்படும். அதுவரைதான் இந்த உலகம் இருக்கும். அந்த நாள் வரை இறக்கும் மனிதர்கள் அந்த அசுத்தத்தின் பிடியில்தான் இருப்பார்கள் அதுதான் நரகம் எனப்படுகிறது. அது பாதாளத்தின் கீழ்பகுதி ஆகும். நமது இடத்தை நாமேதான் தேர்ந்து எடுத்து கொள்கிரோமேயன்றி இறைவன் யாரையும் பாதளம் அனுப்புபவர் அல்ல!


அசுத்த ஆவி மனிதனுக்குள் வந்து கிரியை செய்யும் பொது உடனடியாக அறிய முடியாது ஆனால் அது போனபிறகு நாம் என் இப்படி செய்தோம் என்று நாமே நினைத்து வருந்துவோம்

இறைவன் ஒரு நல்ல உலகத்தை படைத்து அதில் இருந்து தீமையை அகற்றி மனிதனை என்றென்றும் அதில் நித்யமாக வாழ வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடுதான் எல்லாவற்றையும் படைத்தார். அவர் நோக்கத்தை எல்லாம் சரியாக நிறைவேற்றியும் வருகிறார். ஆனால் அது நமது சிற்றறிவுக்கு எட்டாத காரணத்தால் நாம் பல விதமாக இறைவனைப்பற்றி சிந்தித்து குழம்பிக்கொண்டு இருக்கிறோம்.

நிச்சயமாகவே ஒரு நாள் அவர் எண்ணம் போல் தீய ஆவி இல்லாத ஒரு பரிசுத்த உலகம் அமையும். ஆனால் அதில் எத்தனைபேர்கள் பங்கு பெற போகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது

மேலும் சில உண்மைகள்:

இறைவன் எதையுமே வரிசை கிரமமாக செய்யக்கூடியவர். இடையில் இடையில் புகுந்து காரியங்கள் செய்து குழப்புபவர் அல்ல. அவர் செயல் எல்லாவற்றிலும் ஒரு வரிசை கிரமமும் முழுமையும் இருக்கும். "வெளிச்சம் உண்டாக கடவது" என்று அவர் சொன்னவுடன் வெளிச்சம் உண்டாயிற்று ஆனால் அந்த வெளிச்சம் வருவதற்கு ஒரு சோர்ஸ் வேண்டும் என்றும வெளிச்சம் எப்படி வருகிறது என்பதை மனித அறிவுக்கு எட்ட வைக்க வேண்டும் என்பதற்க்க்காகவும் பிறகு சூரியனை படைத்தார். அது போல் மனிதனையும் பெரியவர்களாகவே உருவாக்கிவிட்ட போதிலும் அவர்கள் நமக்கு புரியும் அளவுக்கு தாயின் வயிற்றில் கருவாக தோன்றி வளரும் ஒரு நியமனத்தை ஏற்றபடுத்தினார். அது போலத்தான் மனிதன் திடு திப் என்று வந்து விட்டான் என்று என்ன முடியாத அளவுக்கு சிறு பூச்சிகளில் இருந்து படிப்படியாவ வளரும் உயிரிகளை படைத்து மனிதனை போல குரங்கை படைத்து பின் மனிதனை படைத்தார். இது எல்லாமே இறைவனின் அளவற்ற ஞானத்தால் உருவாக்கப்பட்டது. அவர் படைத்தார் என்று நோக்கினால் அவர் படைப்பாக தெரியும் அதே நேரத்தில் இது தானாக தோன்றியது என்று நோக்கினால் எல்லாமே தானாக தோன்றியதாக தெரியும். அவர் ஞானம் அளவிட முடியாதது!



to be continued....