கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Thursday, August 28, 2008

பாதாளத்தின் பயங்கரங்கள்

அன்பு சகோதரர்களே!

வேத புத்தகத்தில் சுமார் 80 முறைக்கு மேல் பாதாளம் என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளதொடு மட்டுமல்லாமல் "நரகம்" "புறம்பான இருள்" "அக்கினி சூளை" "அக்கினியும் கந்தகமும் எரியும் கடல்" என்றால் வருணிக்கப்பட்டுள்ள நரகம் பாதாளம் பற்றி அநேகருக்கு போதிய வெளிப்பாடு இல்லாத காரணத்தால், அந்த பயங்கரமான இடம் பற்றி முழு நம்பிக்கை மற்றும் பயம் இல்லாமல் வெகு நிர்விசாரமாக, ஆத்துமாகளுக்காக பரிதபிக்கும் உள்ளம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். எனவே முழு வேத வசன ஆதாரங்களோடு பாதாளம் நரகம் பற்றிய இந்த கட்டுரையை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

நான் எழுதுவதில் எங்கும் தவறு அல்லது திருத்தம் இருக்குமாயில் அறிந்தவர் விளக்கலாம் நான் திருத்திக்கொள்வேன். ஆனால் வேத வசன ஆதாரம் தந்த பிறகு அது இது அல்ல வேறு என்றெல்லாம் கருதுவீர்களானால் அதற்க்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல!
முதலில் ஆத்தும்மவுக்கு என்று ஒரு தனி சரீரம் உண்டு என்பதை நம்ப வேண்டும் அது சாதரண மனித கண்களுக்கு தெரிவதில்லை. மருரூப மலையில் மோசே தரிசன்னமானது அந்த சரீரத்தில்தான்

ஏனெனில் வேதபுத்தகத்தில் உள்ள வசனங்களை தனக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டு அருத்தம் எடுக்கும் அநேகர் மத்தியில் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை விளங்கவைப்பது மிக கடினம். நம்புகிறவர் நம்பலாம் நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடலாம். தேவை இல்லாத பொய்யை எழுதி எனக்கு எந்த பலனும் இல்லை எனக்கு நேரமும் இல்லை
நன்றி!


அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர் (சங்: 71-20)

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.(I சாமு 2:6)

என்ற வார்த்தைகளை படி, பாதாளத்தில் இறங்கவும் ஏறவும் பண்ணக்கூடிய கர்த்தராகிய தேவன், 1992 வருடம் தாழ்ந்த பாதாளம் வரை இறங்கிவிட்ட என்னை அங்கிருந்து ஏறப்பண்ணினார். அப்பொழுது நான் பாதாளங்கள் பற்றி அறிந்துகொண்ட உண்மைகளை நீங்களும் அறிந்துகொண்டால் நிச்சயம் அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக ஒரு பரிதபிப்பு வரும் என்ற நோக்கில் இந்த கட்டுரையை பதிப்பது நல்லது என்று நினைத்து பதிக்கிறேன். இதில் அனேக நான் அனுபவித்த, நேரடியாக பார்த்த காரியங்கள் அடங்கியுள்ளன.


பாதாளம் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது:

பாதாளம் என்பது ஒரு குழி என்றும் அது பூமியின் கீழ் தாழ்விடங்களில் இருக்கிறது என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் தெரிவிக்கின்றன.

அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; (வெளி 9;2)
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர் (சங் 88:6)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், (எசே :31:16)

அது பூமியிம் கீழே இருக்கிறது என்பதை கீழ் கண்ட வசனம் தெரிவிக்கிறது

கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, (ஏசா 14:9)



ஆம் அன்பானவர்களே பாதாளம் என்பது ஒரு மிக பெரிய படுகுழி அப்படியே கீழ் நோக்கி பொய் கொண்டே இருக்க கூடியது. அது பூமியின் கீழே மிக சமீபமாக இருக்கிறது. பல இடங்களில் இருந்து அதன் உள்ளே போகும் வழிகள் உள்ளன.

பாதாளத்தின் தன்மைகள் என்ன:?

பாதாளம் தன்னை விரிவாக்கும் தன்மை உள்ளது என்று கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது!


அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள் (ஏசா 5:14)
தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல் (ஆப 2:5)

பாதாளம் எவ்வளவு ஆத்துமாக்கள் உள்ளே போனாலும் திருப்த்தி அடையாது, உள்ளே வாங்கிக்கொள்ளும் தன்மை உடையது என்றும கீழ்க்கண்ட வசனங்கள் சொல்கின்றன!

போதும் என்று சொல்லாத நான்குமுண்டு அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே. (நீதி 30:15,16)

பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; (நீதி 27:20)

மேலும் பாதளம் ஆத்துமாக்களை விழுங்கும் தன்மை உடையது:

பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; (நீதி 1:12)

ஒரு திமிங்கலம் ஒரு மனிதனை விழுங்கினால் அவன் சிறுக சிறுக உரு குலைந்து அழிவதுபோல் இங்கு அழிவு உண்டு ஆனால் அது நிரந்தரம் அல்ல மீண்டும் மீண்டும் அது நடைபெற்றுக்கொண்டு இருக்கும். ஏனெனில் அங்கு அக்கினி அவியாது! புழு சாகாது! சதா காலமும் அங்கு எரிந்துகொண்டு இருக்கும்

பாதாளம் ரூபத்தை அளிக்கும் தன்மை உடையது என்று கீழ் கண்ட வசனம் சொல்கிறது.

அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும். (சங்: 49-14)

அங்கிருப்பவர்களுக்கு ஒரு நிலையான ரூபம் இருக்க முடியாமல் அழிவதும பின்பு புதிதாக உருவத்தாலும் நடைபெறும்.

பாதாளம் கொடியது:

நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது ( உன் 8:6)

ஆம் அன்பானவர்களே பாதாளம் மிக கொடியது மரித்து அதனும் இறங்கும் யாரும் அதனுள் இருந்து ஏறி வரவே முடியாது :

மேகம் பறந்துபோகிறதுபோல பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான் யோபு ( 7:9)

ஆம் மரித்து பாதாளத்துக்குள் இறங்கும் யாருமே மீண்டும் ஏறி வரவே முடியாது .

ஆகினும் தேவனாகிய கர்த்தரால் ஒரு மனிதனை பாதாளத்தினுள் இறங்கவும் ஏறவும் பண்ண முடியும் என்று கீழ்க்கண்ட வசனங்கள் சொல்கின்றன

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.(I சாமு 2:6)
கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர். (சங் 30:3)

பாதளத்தில் மரண அறைகள் என்னும் அறைகள் உண்டு:

அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். ((நீதி 7:27)

மரண அறைகள் என்று சொல்லப்படும் இந்த அறைகளில் நடக்கும் பயங்கரங்கள் எழுத முடியாதவை கொதிக்கும் எண்ணெய் கொப்பரயினுள் போட்டு வேக வைக்கப்படும் ஆனால் அவனுக்கு முடிவு என்பது வராது. ஒரு மனிதனை அப்படியே வைத்து அறுப்பதும் மீண்டும் இணைய வைப்பதும் அறுப்பதும் போன்ற அனேக கொடிய செயல்கள் இங்குள்ள மரண அறைகளில் நடைபெறும்.

அவனவன் செய்த செயல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு அறைகளிலும் வித்யாசமான கொடூரங்கள் நடக்கும்


பாதாளத்தில் யாரெல்லாம் இறங்குவார்கள்:-

"விசுவாசம் உள்ளவனாகி ஞானஸ்த்தானம் பெறுபவன் இரட்சிக்கப்படுவான் விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான்"

ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பு பெறாத யாராக இருந்தாலும் மரித்தவுடன் பாதாளத்தில் இறங்குவார்கள்

பாதாளத்தின் அதிபதி யார்?


அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர் (9:11)
பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (11:7)
நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது(17:8)

மேற்கண்ட வசனம்படி பாதாளத்தின் அதிபதி விழுந்துபோன தூதன் எனப்படும் மிருகம் ஆகும். அங்கு போகும் ஆத்துமாக்கள் அவனுடைய கையாட்களால் வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்புவரை வாதிக்கப்படும்


பாதாளத்தின் வகைகள்:

பாதளம் என்பது மூன்று அடுக்குகளை கொண்டது அவைகள்

1. கீழான பாதளம் (பாதாளத்தின் மேல் தட்டு ஆனால் பூமிக்கு கீழான பாதளம்)
கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம். (15:24)
இங்கு ஆத்துமாக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன அதாவது ஒரு கூடை நிறைய மீன் இருப்பது போல நேழு நேழு என்று ஒன்றன் மேல் ஒன்றாக போராடிக்கொண்டு இருக்கின்றன மற்றபடி கொடூர வேதனை இல்லை.

2. தாழ்ந்த பாதளம் அல்லது அகாதமான பாதாளம்
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (86:13)
ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.( 14:15)

இங்கும ஆத்துமாக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று ஒன்றன் மேல் ஒன்றாக போராடிக்கொண்டு இருக்கின்றன இங்கு புழுக்களும் பூச்சிகளும் உண்டு மற்றபடி கொடூர வேதனை இல்லை. ஆனால் மிகப்பெரிய வேதனை என்னவென்றால் கீழே நரக பாதாளத்தில் நடக்கு கொடூரங்கள் இவைகளுக்கு தெரியும். தானும் அங்கு போய்விடக்கூடாது என்ற நோக்கியில் மேலே ஏற எப்பொழுதும் முயற்சித்து தோற்றுக்கொண்டே இருக்கும், பயமும் திகிலும் உங்கு உண்டு

3. நரக பாதாளம்
ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான். (நீதி 9:8)

இங்கு வரும் ஆத்துமாக்கள் இரவு பகலாக பிசாசின் ஆவிகளால் பல்வேறு விதமாக வாதிக்கப்படுகின்றன. இதற்க்கு கொள்ளளவே கிடையாது எவ்வளவு போனாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையது.

அக்கினிக்கடல்:

இந்த நரக பாதாளத்தை ஒட்டி அக்கினி கடல் என்ற ஓன்று உள்ளது. ஆனால் இது வெள்ளை சிங்கசன நியாய தீர்ப்புக்கு பிறகுதான் திறக்கப்படும்.

தற்சமயம் நடைபெறுவது

இயேசு கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்ளாத ஒரு மனிதன் மரித்த உடன் பாதாளத்தில் இறங்குகிறான். அவன் மிக நல்லவனாக இருந்தால் கீழான பாதாளம் எனப்படும பாதாளத்தின் மேலுள்ள பகுதியிலேயே தங்கிவிடுவான். ஒரு வேளை அவன் ஒரு சாதரண பாவியாக இருந்தால் தாழ்ந்த பாதளம் வரை செல்வான் அங்கு தங்கிவிடுவான். மிகவும் மோசமான பாவியாக இருந்தால் அவன் நேராக நரக பாதளம் சென்று அங்கு பிசாசுகளினால் வெள்ளை சிங்கசன நியாய தீர்ப்புவரை வாதிக்கப்படுவான்.

தற்சமயம் பாதாளத்தின் மேல்பகுதி மற்றும் தாழ்ந்த பாதளம் முழுவதும் நிரம்பி விட்டதால் மரிக்கும் ஒருவர் மோசமான பாவி என்றால் நரக பாதளம் போய்விடுவார். அவர் சாதாரண பாவியாக இருந்து தாழ்ந்த பாதாளத்தில் தங்கி விட்டால் அங்குள்ள இதற்க்கு முன் மரித்த யாரவது ஒருவன் நரக பாதாளத்தில் போய் விழுவார் ஒருவேளை அவர் மிகவும் நல்லவராக பாதாளத்தின் மேல் பகுதியில் தங்கி விட்டால் அவருக்கு கீழ் உள்ள எல்லா ஆத்துமாகளும் ஒரு படி கீழே இறங்கி கடைசியில் உள்ளவர் நரக பாதாளம் போய் விடுவார்.

எனவே இன்று இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் ஒருவரை மரித்தால் அவரோ அல்லது அவருக்கு முன் மரித்த ஒருவரோ நரக பாதாளம் போவது நிச்ச்சயம்.

(தொடரும்)


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home