கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Friday, August 22, 2008

நுணலும் தன் வாயால் கெடும்:-



அன்பு சகோதரர்களே!

துவக்கப்பள்ளி நாட்களில் படித்த உலக பழமொழி இது. அந்த உலக பழமொழி பாடலின் கட்சி வரிகள் இதோ:

"நல்லாய், மணலுக்குள் மூழ்கி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும்"

அதாவது

பாம்புக்கு பயந்து மணலுக்குள் குழிதோண்டி யாருக்கும் தெரியாமல் படுத்து கிடக்கும் தவளையானது, தன் வாயை அடக்க முடியாமல் அங்கிருந்து சத்தம் போட்டு பாம்புக்கு தன் இருக்கும் இடத்தை காட்டி அதனால் மடிந்துபோகும் என்பதே இதன் பொருள்


அன்பானவர்களே இறைஞானம் எனது உலக ஞானத்துக்கு நேர் எதிரானது என்பதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் அனேக வார்த்தைகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.மேலும்:


உலகம் பணக்காரனை பாக்யவான் என்கிறது ஆனால் ஆண்டவர் ஆவியில் எளிமை உள்ளவர்களே பாக்கியவான் என்கிறார்

உலகம் துன்ப படைத்தவனையே பாக்கியவான் என்கிறது ஆனால் ஆண்டவர் நீதியினிமித்தம் துன்பபடுகிறவர்கள் பாக்யவான் என்கிறார்.

உலகம் உனக்கு கிடைப்பதை விட்டுவிடாதே என்கிறது ஆண்டவர் உன்னிடம் கேட்பவனுக்கு கொடு என்கிறார்

உலகம் தாழ்மை உள்ளவனை கோமாளி என்கிறது ஆண்டவர் தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் விட்டு கொடுத்துவிடு என்கிறார்.

இப்படி அனேக காரியங்களை சொல்லமுடியும்.

அதுபோல் இந்த பழமொழி உலக ஞானத்துக்கு சரியாக இருந்தாலும். இதன் கருத்தை நான் வேதத்தோடு தியானித்த பொது கிடைத்த செய்திதான் இந்த பதிப்பு.

1. மணலுக்குள் மூழ்கி மறைந்து கிடப்பது!


ஆண்டவரை அறிந்த ஒருவர், எதாவது ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டு ஒரு சுக போகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஆண்டவரை பற்றி சொன்னால் அல்லது ஆண்டவர் சொல்படி வாழ்ந்தால் ஏதாவது பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று நினைத்து உலகத்துடன் ஒத்தவேஷம் போட்டு வாழும் வாழ்க்கையையே இந்த மறைந்து கிடப்பது குறிக்கிறது.

இந்த மறைந்து வாழும் வாழ்க்கை ஒரு கிறிஸ்த்தவ வாழ்க்கையா?
ஆண்டவரின் அன்பை உண்மையாக அறிந்த ஒருவரால் இப்படி வாழ முடியுமா?

ஒரு நாளும் முடியவே முடியாது. விளக்கை கொளுத்தி விளக்கு தண்டுமேல் வைக்கவேண்டும் என்பதும் நமது ஆண்டவர் சொன்ன வார்த்தை.

வெளியில் வந்தால் சாத்தான் என்கிற பாம்பாகிய எதிரி உண்டு!

ஆனால் என்ன துன்பம் வந்தாலும் கேடு வந்தாலும் மறைந்து கிடக்கும் அல்லது பயந்து போய் ஆண்டவரை பற்றி பேசாமல் அவர் வார்த்தைக்கு கீழ்படியாமல் வாழும் வாழ்க்கை ஒரு கிறிஸ்த்தவ வாழ்க்கையே அல்ல. அப்படிபட்டவர்கள் உண்மையாக ஆண்டவரின் அன்பை அறியவில்லை என்பதே உண்மை.

2. வாயால் கெடுவது.


தேவையற்ற உலக பேச்சுகளை பேசி தனது வாயாலே கெட்டுபோன பலரை பார்க்க முடியும், ஆனால் கிறிஸ்த்தவத்தில் ஆண்டவரை பற்றி பேசும் ஒவ்வொரு பேச்சும் எழுத்துக்களும் அவருக்காக செய்யும் ஒரு சிறு செயலும் "கர்த்தரின் ஞாபக புஸ்த்தகத்தில்" குறிக்கப்படும். அதனால் மிக்க பயன் உண்டே அன்றி கெடுதல் எதுவும் இல்லை

மேலும் ஆண்டவரின் உண்மை அன்பை அறிந்த ஒருவராலும் அவரை பற்றி பேசாமல் இருக்கவே முடியாது! எரேமிய சொல்வதுபோல் "ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று." (எரே 20:9)

ஆண்டவரின் வார்த்தைகளை உள்ளத்தில் அடக்கி வைத்து மறைந்து வாழவே முடியாது!


" புறப்பட்டு போய் சுவிஷேசத்தை" அறிவியுங்கள் என்பது நமது ஆண்டவர் சொன்ன வார்த்தைகள்.

அதேபோல் பேதுரு பரிச்த்த ஆவியின் அபிஷேகம் பெற்றவுடனும் பவுல் அவர்கள் ஆண்டவரின் தரிசனம் பெற்ற உடனும் தாமதிக்காமல் மறைந்து கொள்ளாமல் தங்களது வார்த்தைகளை பிரசங்கிக்க ஆரம்பித்து விட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் அனுபவித்த பாடுகளும் துன்பமும் அநேகம்தான். அவர்கள் மறைந்து கொண்டு பேசாமல் இருந்தால் துன்பம் இல்லை தானே.

எனவே துன்பத்துக்கும் உலக இன்பம் போய்விடுமோ என்று பயந்தும் ஆண்டவரை பற்றி பேசாமல் பயந்து வாழும் வாழ்க்கை ஒரு உண்மையான கிறிஸ்த்தவ வாழ்க்கை அல்ல!

3. பாம்பாகிய எதிரி!


உலத்தில் உள்ள பாம்பாகிய எதிரி தவளையை விழுங்கிவிடலாம் ஆனால் நாம் பிரசங்கிக்கும் ஆண்டவர் எதிரியாகிய சாத்தானின் தலையை நசுக்கியவர் "அல்லேலூயா" எனவே அவனால் நம்மை ஒன்றும் செய்யவே முடியாது எனவே நாம் பயப்பட வேண்டிய தேவையே இல்லை.

"இதோ உலகத்தின் முடிவு பரியந்தவும் சகல நாட்களும் உங்களோடே இருக்கிறேன்" என்று தைரியமூட்டும் வார்த்தைகளை சொல்லியுள்ள ஜீவனுள்ள தேவனை வணங்கி கொண்டு எதிரிக்கு பயந்து பேசாமல் இருப்பது என்பது மூட்டை பூச்சிக்கு பயந்து கொண்டு வீட்டுக்குள் போகாமல் இருப்பதையே குறிக்கும்.

எனவே ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் துணித்து இருக்கும் நிலையிலேய ஆண்டவரின் அனைவருக்கும் எடுத்து சொல்வதோடு ஆண்டவரின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கண்பிப்பதே துணிந்து ஆண்டவருக்காக வாழும் ஒரு வாழ்க்கை ஆகும்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home