கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Monday, February 16, 2009

மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல!

தேவனாகிய கர்த்தர் 1992ஆம் ஆண்டு அடியேனை தனது வல்லமையின் ஆவியினால் இரண்டு முறையாக மொத்தம் 7 நாட்கள் அபிஷேகித்து வேதத்தில் உள்ள அனேக ரகசியங்களை தெரியப்படுத்தினார்.

அந்த சமயங்களில் ஒருமுறை பூமியின் தாழ்விடங்கள் வரை என்னை இறங்கவும் ஏறவும் பண்ணினார். என் உடம்பு மட்டும் பூமியில் இருக்க, ஆத்தும சரீரத்தில் இருந்த நான் தாழ்ந்த பாதளம் வரை சென்று அங்கு ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரித்த ஆத்துமாக்களை அப்படியே நேரில் பார்ப்பது போல பார்த்து அவற்றின் வேதனையை அனுபவித்தேன். அத்தோடு இன்னொருமுறை என்னை நரகத்தில் உள்ள கொதிக்கும் எண்ணெய் கொப்பரை ஒன்றில் தூக்கி போட்டுவிட்டார்கள். கொதிக்கும் எண்ணெய் கொப்பரை ஒன்றில் போடப்பட்ட மனிதன் எப்படி துடிப்பானோ அதுபோல பூமியில் கிடந்த என் மாமிசம் துடித்து அங்கும் இங்கும் துள்ளி கை கால்களில் அனேக அடிபட்டு காயம் ஏற்பட்டு அனேக நாட்கள் ஆராமல் இருந்து.

.

நான் நரகத்தில் விழுந்தேன், நரகத்தை பார்த்தேன் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. எனக்கு பயித்தியம் பிடித்துவிட்டு என்று நினைத்து இரஜாவூர் என்னும் ஒரு உரில் உள்ள RCசர்ச் ஒன்றில் கை கால்களில் சங்கிலியால் கட்டி சுமார் ஒரு மாதம் போட்டுவிட்டார்கள்.

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்... http://www.victoryondeath.blogspot.com/




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home