என்மீது தேவ சித்தம் என்ன?
இரட்சிக்கப்படுவதும் ஆண்டவரை அறிந்துகொள்வதும் நித்ய ஜீவனுக்கு தகுதியுள்ளவனாக வாழ்வதும் எல்லா மனிதர்கள் மேலும் ஆண்டவருக்கு உள்ள ஒரு பொதுவான திட்டம். அதைப்பற்றி வேதமே நமக்கு விளக்கி கூறுகிறது. ஆனால் எப்படி ஆண்டவர் பவுலை சந்தித்தபோது அவரை புரஜாதிக்கு அப்போஸ்தலனாக நியமித்தரோ, ஒரு பேதுருவை வைத்து தன் சபையை கட்ட தீர்மானித்தாரோ, ஒரு எஸ்தர் மூலம் யூத ஜனங்களை விடுவித்தாரோ அதுபோல் ஒவ்வொருவர் மேலும் ஒரு தனிப்பட்ட மேன்மையான திட்டம் தேவனுக்கு நிச்சயம் உண்டு!
- தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். (ரோ: 12:2)
நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். (எபே 5:17)
என்று வேதம் நமக்கு போதிப்பதால் எல்லோருக்கும் அவரவர் மீதுள்ள தேவ திட்டம் என்ன என்பதை அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது . தேவ சித்தத்தை அறிய நம் மனதை ஒருமனப்படுத்தி விடாபிடியான தொடர் ஜபம் நிச்சயம் தேவை என்றாலும், வெறும் ஜெபத்தால் மட்டும் தேவ சித்தத்தை அறியமுடியாது. தேவனிடமிருந்து நம்மேல் உள்ள தேவதிட்டத்தை பெறுவதற்கு ஜெபத்தை தவிர மேலும் இரண்டு தகுதிகள் நிச்சயம் வேண்டும்!
1. தேவன் என்ன சொன்னாலும் கேட்கும் மனப்பக்குவம்!
தேவனின் திட்டம் அறிய முற்ப்படும் ஒவ்வௌர்வரும் முதலில் தன்மனதில் உள்ள எல்லா திட்டங்களையும் குறிக்கோள்களையும் குப்பையில் தூக்கி போடவேண்டும். இன்று உலகில் சிறு பிள்ளைகள் கூட நான் டாக்டராவேன், எஞ்சினியர் ஆவேன் கலக்டராவேன் என்பதிலிருந்து பாஸ்டராவென் என்பது வரை ஏதாவது ஒரு திட்டத்தோடு வாழ்வதை பார்க்க முடியும் ஆனால் "உங்கள் வழிகள் என் வழிகள் அல்ல" என்று கர்த்தர் சொல்கிறார்! நாம் போடும் எந்த திட்டமும் கர்த்தரின் திட்டம் அல்ல என்பதை முதலில் அறியவேண்டும்.
சமீபத்தில் இடம் வாங்குவதற்க்காக ஒருவரிடம் ரூபாய் 80000/-கொடுத்து ஏமாந்த ஒரு பெண்மணி, ஏமாற்றியவன் கொடுத்து, பணமின்றி திரும்பிய காசோலையையும் காண்பித்து இந்த பணம் கிடைக்குமா? அல்லது கோர்ட்டில் கேஸ் போடலாமா? தேவசித்தம் என்ன? என்று அறிய விரும்பினார்கள். அந்த தேவமனிதர் ஆண்டவரிடம் அதுபற்றி விசாரித்து மிக சாதரணமாக "அந்த பணத்தை வேண்டாம் என்று விட்டுவிடச்சொல் கர்த்தரால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும்" என்றார். இதை கேட்ட அந்த பெண்மணி அவரை திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். "எவ்வளவு கஷ்டபட்டு நான் சேர்த்த பணம் இவ்வளவு சுலபமாக விட்டுவிடு என்று சொல்கிறீர் உமக்கு பணத்தின் மதிப்பு தெரியவில்லை" என்று கோபத்தோடு கூறினார்கள்
பாபிலோன் ராஜா தேசத்தின் மேல் அதிகாரியாக்கின அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதினிமித்தம், கல்தேயருக்குப் பயந்தபடியினால். தாங்கள் எகிப்துக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்கு அருகான கிம்கானின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.
அப்பொழுது அவர்கள் எரேமியா தீர்க்கதரிசியை அழைத்து தேவனிடத்தில் விசாரிக்க சொன்னார்கள் அவர் சொல்லும் வார்த்தைக்கு கீழ்படிவோம் என்று சொன்னார்கள்
.
ஆனால் எரேமியா நீங்கள் எகிப்த்துக்கு போனால் அழிந்துவிடுவீர்கள் இங்கேயே தங்கியிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொன்னபோது அவனை திட்டி நீ பொய் சொல்லுகிறாய்; ........கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள். இப்படி தங்கள் மனிதில் ஒரு திட்டம் வைத்துக்கொண்டு ஆண்டவரின் திட்டத்தையும் அறிய நினைத்தால் முடியாது.
எனவே தேவதிட்டம் அரிய முற்ப்படும்முன் நம் சுயதிட்டங்கள் எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும்!
தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்; (கலா 1:16) என்று சொல்லும் பவுலின் வார்த்தைகள்போல், மாமிசத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணினால் தேவசித்தம் ஒருநாளும் நிறைவேறாது.
கானான் தேசத்த்தை வேவு பார்க்கபோனவைகள் அங்குள்ள ரட்சஸ ஏனாக்கியரை பார்த்து பயந்து, நமது மாமிச பலத்தால் எப்படி மேற்க்கொள்ள முடியும் என்று யோசனைசெய்து அதை சுதந்தரிப்ப்து முடியாத காரியம் என்று துர்செய்தியை பரப்பினர்.
நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். (எண்: 13:31)
.
அதுபோல் சவுலும் அவன் படை வீரர்களும் கோலியாத்தின் மாமிசத்தை பார்த்து அவனை மேற்க்கொள்ள முடியாது என்று பயந்து ஒதுங்கினார்கள். ஆனால் தாவீதோ அவன் மாமிச உருவத்தை பார்த்தது பயம் எதுவும் வரவில்லை கர்த்தரால் முடியும் என்று நம்பி ஜெயித்தான்.
.
எனவே அன்பானவர்களே தேவசித்தம் அறிந்தாலும், அதை நம் மாமிசபிரகாரம் யோசனை செய்து இது எப்படி சாத்தியமாகும் என்று எண்ணி குழம்பிவிடக்கூடாது. அது எந்த காரியமானாலும் ஆண்டவரை நினைத்து துணிந்து ஒரு அடி எடுத்து வைத்தல் அடுத்த வழி தானாக திறக்கும்!
.
நாம் எத்தனை வழிகளில் தேவசித்தத்தை அறிய முயன்றாலும், தேவன் தன் சித்தத்தை தெரியப்படுத்தினால் அதை நாம் நிறைவேற்றுவதற்கு நம் மனதில் உள்ள உறுதியின் அடிபடையிலேயே ஆண்டவர் தன் சித்தத்தை தெரியப்படுத்துவார்! அது வேதம் வாசிக்கும்போது வெளிப்படலாம் அல்லது வேறு யார் மூலமோ சொல்லப்படலாம் அல்லது ஆண்டவரே கூட நம் இதயத்தில் பேசி தெரியப்படுத்தலாம்
1 Comments:
how r u,sir..?
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home